Skip to main content

மார்ச் 29

 

மார்ச் 29,1728

எடின்பர்க்கில் முதன்முதலாக இசைக் கழகம் எடின்பர்க்  இசைக்கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.

 மார்ச் 29, 1857

பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த காரணத்திற்காக ஒரு படைப் பிரிவில் உள்ள அத்தனை இந்திய வீரர்களும் தண்டிக்கப்பட்டனர். இதனால் மத உணர்ச்சி தூண்டப்பட்ட ஒரு வீரன் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை போரில் கொன்று விட்டான்.  இதன் எதிரொலியாக மீரட் நகரில் உள்ள பல இந்திய வீரர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கலகக்காரர்கள் என்று குற்றம் சாட்டினர். 

சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர் துவங்கத் தூண்டுகோலாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.

 மார்ச் 29, 1886

அட்லாண்டாவைச் சார்ந்த ஜான் பெம்பர்டன்  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கோ கோலா மூளை அபிவிருத்தி டானிக் என்றும் மேதைகளின் பானம் என்றும் தவறான  விளம்பரத்துடன் விற்பனை துவங்கப்பட்டது.

 மார்ச் 29, 1982

ஆந்திராவில் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவக்கினார்.

 மார்ச் 29, 2007

புகழ் பெற்ற இசை மற்றும்  நடன விமர்சகர் சுப்புடு மறைந்த நாள். 

த ஸ்டேட்ஸ்மேன்  ஆங்கிலப் பத்திரிகையில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களை ஏறத்தாழ 60 ஆண்டுகள் எழுதி வந்தவர்.  

தமிழ்ப் பத்திரிகைகளிலும் இசை விமர்சனங்கள் எழுதினார். பல மூத்த பாடகர்களும் நடனக் கலைஞர்களும்  கூட சுப்புடுவின் விமரிசனத்துக்கு முக்கியத்துவம் தந்தனர். எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும்  யாருக்கும் அஞ்சாமல் 'வெட்டு ஒன்று  துண்டு இரண்டு ' என இவர் எழுதும் விமர்சனத்தை ஒருவித பயம் கலந்த மரியாதையோடு ஏற்றுக்கொண்டது இவரின் சிறப்புக்கும் நிபுணத்துவத்துக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...