Skip to main content

மார்ச் 20

 மார்ச் 20 1727   

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து உலகப் புகழ்பெற்ற  சர்.ஐசக் நியூட்டன் லண்டனில் காலமானார்.

மார்ச் 20 1780 

நகல் எடுக்கும் எந்திரம் டூப்ளிகேட்டிங் மிஷின் தயாரிப்பதற்காக ஜேம்ஸ் வாட் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை அதன் கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் வாட் துவக்கினார்.

மார்ச் 20 1981

மூன்று  பைசா , இரண்டு பைசா,  ஒரு பைசா நாணயங்கள் அடிப்பது நிறுத்தப்பட்டது.

மார்ச் 20 1942

திரைப்படப் பாடலாசிரியர்  கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாள். 

ஆயிரத்து ஐநூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர்.அரசவைக் கவிஞராக இருந்தவர். முன்னாள் மேலவை உறுப்பினரும்  கூட.


தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உருவெடுத்து ...


பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்...


சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே...


இதழில் கதை எழுதும் நேரமிது...

என இவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் புகழ் பெற்ற பாடல்களாக விளங்குகின்றன. 

மார்ச் 20 1992 

உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மார்ச் 20 2014

புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் குஷ்வந்த் சிங் மறைந்த நாள்.  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர். 

இவர் எழுதிய நாவலான Train to Pakisthan (ட்ரெயின் டு பாகிஸ்தான்) இந்திய சுதந்திரத்தின்  போது பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.   




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...