Skip to main content

மார்ச் 22

 மார்ச் 22 1744 

பாபா பிளாக் ஷீப் முதலான நர்சரி பாடல்கள் அடங்கிய டாம்மி  தம்ப்ஸ் சாங் புத்தகம் திருமதி மேரி கூப்பரால் வெளியிடப்பட்டது.

  மார்ச் 22 1877

இந்தியாவின் பெரிய தொழில் சாம்ராஜ்யங்களுள் ஒன்றான டிவிஎஸ்&சன்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் T V சுந்தரம் அய்யங்கார் பிறந்த தினம். 

அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே.   மதுரையில் முதலில் பேருந்து சேவையை இவர் ஆரம்பித்த பிறகே தென் இந்தியாவில் சாலைப் போக்குவரத்துத்துறை என ஒரு துறை உருவானது.  

மார்ச் 22 1935 

பெர்சியா இன்று தனது பெயரை ஈரான் என்று மாற்றிக் கொண்டது.

மார்ச் 22 1942

பிரிட்டனின் இந்தியக் கொள்கையை  விளக்க சர். ஸ்ட்ராபோர்ட் கிரிப்ஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் பிரிட்டிஷ் அரசின்   புதிய கருத்துக்களைக் கொண்ட நகல் பிரகடனம் ஒன்றை வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர்களிடம் 23ஆம் தேதி (அதாவது வந்த அடுத்த நாள்) கொடுத்தார்.

மார்ச் 22 2005 

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மறைந்த நாள். 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்பதாகும்.  திரைப்படத்துக்காக இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது.  ஜெமினி ஸ்டுடியோவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால்  ஜெமினியும் இவர் பெயரோடு ஒட்டிக்கொள்ள ஜெமினிகணேசன் என்ற பெயரில் புகழ் பெற்ற நடிகரானவர்  இவர். 

அவர் கடைசியாக தமிழில் நடித்த படம்  'அவ்வை சண்முகி'.


மார்ச் 22 2020

திரைப்பட  நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பல்வேறு வகையிலும் திறமை வாய்ந்தவரான  விசு  மறைந்த நாள். 

தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை ஜனரஞ்சகமான கதையாக்கிக் கொண்டு,  தரமான குடும்பப் படங்களை வழங்கியவர் இவர். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...