Skip to main content

ஜனவரி 31

ஜனவரி 31, 1912 

தமிழ் இலக்கிய உலகில் க.நா.சு என்று குறிப்பிடப்படும்  க.நா.சுப்ரமண்யம் பிறந்த நாள். 

இவரது ஆங்கிலப் படைப்புகள் வழியாகவே தமிழ் இலக்கியத்தின் பெருமை பிறமொழி  இலக்கிய ஆர்வலர்களையும் வாசகர்களையும் சென்றடைந்தது.  படைப்பாளராக மட்டுமன்றி சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்றவர் இவர். 

 ஜனவரி 31, 1928 

ஒட்டுவதற்கு உதவும் ஒளி புகக்கூடிய தன்மையுடைய டேப் (adhesive tape) விற்பனைக்கு வந்தது.



ஜனவரி 31, 1950
 
பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் டைகர் வரதாச்சாரியார் இன்று மறைந்தார்.  

ஜனவரி 31, 1976 

பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்ததைத் தொடர்ந்து கருணாநிதியின் தலைமையிலான திமுக மந்திரி சபை பதவி நீக்கம் செய்யப்பட்டது. 

தமிழ்நாட்டில் முதன்முதலாக ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

ஜனவரி 31, 1988 

தமிழ் நாவலாசிரியர் அகிலன் மறைந்த நாள்.  

அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. நாவல் ஆசிரியராக அறியப்பட்டாலும் சிறுகதையாளராக, நாடகாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக பல முகங்களைக் கொண்டவர் இவர். தமிழில் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார் அகிலன்.  சித்திரப்பாவை இவருடைய புகழ் பெற்ற நாவல். 

ஜனவரி 31, 2009

நகைச்சுவை  நடிகர் நாகேஷ் மறைந்த நாள்.  

தாராபுரம், கொளிஞ்சிவாடியில் 27 செப்டம்பர் 1933  அன்று பிறந்தவர் நடிகர் நாகேஷ். இயற்பெயர் நாகேஷ்வரன்.   நகைச்சுவை நடிக‌ராக இவர் புகழ் பெற்றாலும் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்  நாகேஷ் . 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...