ஜனவரி 30, 1874
வள்ளலார் நினைவு நாள்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.
என்று ஆசிரியர் சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள். இராமலிங்கனை எழுப்பிக் கூறச்சொன்னார். வேண்டாம் எல்லாம் வேண்டும் என மாற்றி புதிய பாடல் பாட அனுமதி கேட்டான் அந்த மாணவன். ஆசிரியரும் அனுமத்தித்தார் .
"ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்"
என்று தொடங்கி ஒரு பாடல் பாடினான் அந்த மாணவன்.
அந்த மாணவன் தான் இராமலிங்க வள்ளலார் என்று பின்னாளில் புகழ் பெற்ற வள்ளலார்.
ஜனவரி 30, 1910
இந்தியாவின் பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவுக்கு வித்திட்டவரான சி. சுப்பிரமணியம் பிறந்த நாள். 1998ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 7.11.2000 அன்று மறைந்தார்.
ஜனவரி 30, 1927
தமிழறிஞர் இரா.இளங்குமரனார் பிறந்த தினம்.
செந்தமிழ் அந்தணர் என்ற அடைமொழியால் அறியப்பட்டவர். பள்ளி ஆசிரியராக இருந்த இவர் பின்னர் நூலாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர் என ஒரு முழுமையான தமிழறிஞராக மிளிர்ந்தார். சொல்லாராய்ச்சிக்கும் தனித்தமிழ் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் தந்த இவர், திருவள்ளுவர் தவச்சாலை என்ற அமைப்பை நிறுவி அதன் வழியாக தமிழ்முறைத் திருமணங்களையும் நடத்திவந்தார்.
தன்னுடைய 94ஆவது வயதில் மதுரை திருநகரில் உள்ள தனது வீட்டில் 2021 ஜூலை 25 அன்று காலமானார்.
ஜனவரி 30, 1948
காந்திஜி மறைந்த நாள்.
ஜனவரி 30, 1984
கொடைக்கானலில் மகளிர் பல்கலைக்கழகம் துவங்குவதற்கான அவசரச் சட்டம் தமிழ்நாடு ஆளுநரான எஸ்.எல்.குரானாவினால் பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரி 30, 2007
அமெரிக்க எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon) மறைந்த நாள்.
இவர் திரைப் படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர்.
தனது 50வது வயதைக் கடந்த பின்னர் நாவல்கள் எழுதினார். அந்த நாவல்கள் எண்ணிக்கையில் ஒரு சில தான் என்றாலும் ஒவ்வொரு நாவலும் உலக அளவில் பேசப்பட்டது.
மாஸ்டர் ஆப் த கேம், ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ், தி அதர் சைட் ஆஃப் த மிட் நைட் எல்லாம் உலகம் பூராவும் வரவேற்பைப் பெற்ற இவருடைய நாவல்கள்.

Comments
Post a Comment
Your feedback