Skip to main content

ஜனவரி 29

 ஜனவரி 29, 1780 

ஜேம்ஸ் அகஸ்ட் ஹிக்கே என்பவரால் 'த பெங்கால் கெசட் ' என்னும் வார இதழ் கல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலத்தில் வெளி வந்த இந்த இதழ் தான் இந்தியாவின் முதல் வார இதழாகும். 

 ஜனவரி 29, 1915

பழம்பெரும் கர்நாடக சங்கீத வித்வான் வி. வி. சடகோபன் பிறந்த தினம். 

கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கிய இவர் திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார்.  மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லிப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக பல்துறை ஆளுமையாக இருந்தார்.  

இவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. டெல்லியிலிருந்து ஆந்திராவின் குண்டூருக்கு ரயில் வந்து கிகுண்டூர் ரயில்நிலையத்தில் இறங்கிய பின் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

ஜனவரி 29, 1939 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காந்தியின் ஆசி பெற்ற பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.

பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி என்று இது குறித்து காந்தி கருத்து தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற போதும் செயற்குழு உறுப்பினர்கள் காந்தியின் எண்ணப்படி சுபாஷுக்கு ஒத்துழைப்புத் தராததால் சுபாஷ் மார்ச் 29ஆம் தேதி பதவி விலகினார்.


ஜனவரி 29, 1963

"The Road Not Taken" உள்ளிட்ட புகழ்பெற்ற கவிதைகளை வழங்கிய ராபர்ட் பிராஸ்ட்  (Robert Frost) மறைந்த தினம்.  
இலக்கியத்துக்கு வழங்கப்படும்  விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை  பெற்றவர் இவர். 

ஜனவரி 29, 1980 

பிரபல திரைப்பட நடிகர் எஸ்.பி.சுப்பையா காலமானார்.

ஜனவரி 29, 1995

பிரபல திரைப்படப் பாடகர்  சி. எஸ். ஜெயராமன்  மறைந்த நாள். 

பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்தவர் இவர். 1940  முதல் 1970 வரை வெளிவந்த படங்களில்  சி. எஸ். ஜெயராமன்  முக்கியமான பாடகராக விளங்கினார். 

முன்னாள்  முதலமைச்சர் மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன் இவர்.  கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர்  சி. எஸ். ஜெயராமன்  தான்.  

காவியமா நெஞ்சில்   ஓவியமா என்ற  அமரத்துவம் வாய்ந்த பாடல் இவர் பாடியது தான்.  பாவைவிளக்கு  படத்தில் மருதகாசி வரிகளில் K.V.மகாதேவன் இசையில் வந்தது இந்தப்பாடல்.   

ஜனவரி 29, 2003 

பழம்பெரும் திரைப்பட நடிகை பண்டரிபாய் மறைந்த தினம். கன்னடத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகி என்ற பெருமை கொண்டவர். தமிழ்,  தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 1000 திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகை இவர். 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற மன்னன் படப் பாடலில் அம்மாவாக வந்து  தமிழ் ரசிகர்களில் மனதில் பதிந்து போனவர்  பண்டரிபாய்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...