Skip to main content

ஜனவரி 19

 ஜனவரி 19 ,1597 

அக்பரின் மொகலாயப் படையைக் கதிகலங்க வைத்த மேவார் மன்னன் மகாராணா பிரதாப் இன்று மரணம் அடைந்தார்.

 ஜனவரி 19 ,1736

நீராவி இயந்திரம் என்ற வார்த்தையோடு  நினைவுக்கு வரும் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்  பிறந்த தினம். இவரது கண்டுபிடிப்பு தான் உலகில்  தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக  அமைந்தது. 

 ஜனவரி 19 ,1855

மகாகவி பாரதியாரின் வாழ்க்கையோடு தொடர்புடையவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் பிறந்த நாள். 

இவரது முழுப்பெயர் கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர்.  1878 செப்டம்பர் 20 அன்று தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும் இருந்தவர் இவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழையும் இவர் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இவர். 


 ஜனவரி 19 ,1898 

புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர்  வி. எஸ். காண்டேகர்   பிறந்த நாள்.   

ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர் இவர் தான்.  இவரது பல நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான எழுத்தாளர் இவர். இவர் எழுதிய யயாதி எனும் நூல், 1960ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 

 ஜனவரி 19 ,1933

பிரபல கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள். தனிச் சிறப்பான தன்னுடைய வெண்கலக் குரலால் இவரது பக்தி இசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.  மேடைக் கச்சேரியோடு திரைப்படப் பின்னணிப் பாடகராகவும் புகழ் பெற்றவர்.  இவர் மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் தற்போது பக்திப்பாடல்கள் பாடுவதில்  புகழ்பெற்றவராக விளங்குகிறார். 



ஜனவரி 19,1956 

நமது நாட்டில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தேசிய உடைமையாக்கப்பட்டன.

ஜனவரி 19,1990 

ஆன்மிக மற்றும் தியான போதனையில் உலகமெங்கும் தன்னுடைய சீடர்களை பெற்றுள்ள ஓஷோ மறைந்த நாள். இருபத்தொரு வயதில் ஞானம் பெற்று தன்னை ஆன்மிக குருவாக ஆக்கிக்கொண்டவர் இவர்.  ரஜ்னீஷ் சந்திர மோகன் என்பது இவரது இயற்பெயர். 

ஜனவரி 19, 1977 

முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கை அரசுக்குத் தரப்பட்டது.

ஜனவரி 19,  2020 

சென்னை சேப்பாக்கம் M.A. சிதம்பரம் ஸ்டேடியம் என்ற பெயருக்குக் காரணமான தொழிலதிபர் M. A.  சிதம்பரம்  (முத்தையா அண்ணாமலை சிதம்பரம்) மறைந்த நாள்.  

செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மூன்றாவது மகன் இவர். 

ஜனவரி 19,  2021 

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்த மருத்துவர் வி. சாந்தா மறைந்த நாள்.  1955 ஆம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில்  பணியில் சேர்ந்த இவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் மருத்துவ சேவையிலேயே அர்ப்பணித்துக்கொண்டவர்.  1980 முதல் 1997 வரை மருத்துவமனையின் இயக்குனராகப் பணியாற்றினார். மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ , பத்ம விபூஷண் போன்ற  விருதுகளைப் பெற்றவர் இவர். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...