Skip to main content

ஜனவரி 10

 ஜனவரி 10, 1761 

தான் எழுதிய தொடர்ச்சியான நாட்குறிப்பு மூலம் ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை  மறைந்த தினம். 

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெ னியின் அலுவலராகவும்  துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 ஜனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாமல் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 

உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி என்று சாமுவேல் பெப்பீசு என்பவரைச் சொல்கிறார்கள்.

பெப்பீசு எழுதிய காலத்தை விட அதிகமான காலம் எழுதியதோடு அதை ஒரு வரலாற்று ஆவணம் போல வழங்கியதில் சாமுவேல் பெப்பீசு எழுதியதை விட இவரது நாட்குறிப்பு சிறப்பானது.  

இந்தியாவின் பெப்பீசு என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி. 


இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இன்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 


ஜனவரி 10, 1778 

விலங்குகள் தாவரங்கள் கனிமங்கள் ஆகியவற்றை முறையாக வகைப்படுத்தியவரும் தாவரவியலில் பகுப்பாய்வியலில் இருபெயர் முறையை (Binomial nomenclature) அறிமுகப்படுத்தியவருமான ஸ்வீடனைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் கார்ல் லின்னேய்ஸ் ஸ்வீடனில் காலமானார்.


ஜனவரி 10,1933
 
கணையாழி இலக்கிய இதழின் நிறுவனர்  கி. கஸ்தூரிரங்கன் பிறந்த நாள். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

ஜனவரி 10,1940

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்த தினம். 
கர்நாடக இசையில்  புகழ்பெற்றவர்.   மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ள அபார சாதனைக்குச் சொந்தக்காரர். எட்டு முறை தேசிய விருது பெற்றவர். இவரது குரலில் வரும் ஐயப்ப சுப்ரபாதம் ஐயப்ப பக்தர்களின் பக்தி இசை .



 ஜனவரி 10,1966 

தாஸ்கண்ட் உடன்படிக்கை இன்று தான் கையெழுத்தானது.

ஜனவரி 10,1972 

பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த ஷேக்  முஜிபுர் ரகுமான் இன்று முதன் முதலாக தன்னுடைய புதிய நாட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். 

 9 மாதங்களாக பாகிஸ்தான்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இன்று நாடு திரும்பினார். இந்திய ஆதரவுடன் நடந்த போரில் வென்றபின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவானதுதான் பங்களாதேஷ்.

ஜனவரி 10, 2006 

இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நாடக மற்றும்  திரைப்பட நடிகர் ஆர். எஸ். மனோகர் மறைந்த தினம். . 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...