Skip to main content

ஜனவரி 28

28 ஜனவரி 1832 

பிரிட்டிஷ்  இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான  சர்.திருவாரூர் முத்துச்சாமி ஐயர்  பிறந்த நாள்.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் இன்று  பிறந்த அவர், 25 ஜனவரி 1895 அன்று மறைந்தார். 

 ஜனவரி 28, 1848 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் ஹோரேஸ்வெல்ஸ் என்பவர் 1845இல் வலி தெரியாமல் பல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அதை பாஸ்டனில் பிரபல அறுவை நிபுணர்கள் முன்னர் செய்து காட்ட முன்வந்த போது இன்றைய நாள் அவருக்கு துரதிஷ்டமாக அமைந்தது. பல்லை எடுப்பதற்காக வந்த ஒரு மாணவருக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுத்த மருந்தின் அளவு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பல்லை எடுக்கும் போது வலியால் அந்த மாணவன் அலறிவிட்டான். இந்தத் தோல்வியால் மனமுடைந்த அவர் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சில்லறை விற்பனை செய்கின்ற கடை ஆரம்பித்து விட்டார். 

அதே நேரத்தில் இவரிடம் இருந்து இந்த முறையைத் தெரிந்து கொண்ட மார்டன் என்பவர் 1846 ஆம் ஆண்டு ஈதரைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். வெல்ஸ் இதற்கு உரிமை கொண்டாடியும் பயனில்லாமல் போய்விட்டது. 

தான் கண்டுபிடித்த ஒன்று மற்றவர் பெயரில் வெளியானதால் 1848 ஆம் ஆண்டு குளோரோஃபார்முக்கு அடிமையாகி மனக் கோளாறு ஏற்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நியூயார்க் சிறையில் குளோரோபாமை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி இன்று ஹோரேஸ்வெல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

ஜனவரி 28, 1882 

சென்னையில் இன்று தான் முதன்முதலாக தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டது. 

ஜனவரி 28, 1899 

இந்தியத் தரைப்படையின் முதல் தலைமைத் தளபதி Commander-in-chief பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பிறந்த தினம். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு நடந்த  இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்திய தளபதி இவர் தான்.

ஜனவரி 28, 1925 

இந்திய அணுஆற்றல் துறையின் முக்கியமான விஞ்ஞானி   இராஜா இராமண்ணா  பிறந்த நாள். 

இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர் இராஜா இராமண்ணா.   அணு விஞ்ஞானியாக இருந்தாலும் இசைக் கலைஞராகவும் சமஸ்க்ருத இலக்கியமேதையாகவும் இருந்தவர் இவர். 

1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம்  நாளன்று ராஜஸ்தான் பாலைவனத்தில் பூமிக்கடியில்  நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரில் ஹைட்ரஜன் பாம்  வெடிப்பு ஆய்வினை நடத்தியவர் இவர்.

ஜனவரி 28, 1988 

நம் நாட்டில் தொலைபேசி வசதி ஏற்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவூட்டும் வகையில் இரண்டு ரூபாய் மதிப்புடைய தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...