Skip to main content

ஜனவரி 21

 ஜனவரி 21, 1895

தென்னிந்தியாவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதியான சர். முத்துசாமி ஐயர் இன்று காலமானார்.


 ஜனவரி 21,1922 

கோயம்புத்தூரில் உள்ள டவுன் ஹாலை தன் சொந்தச் செலவில் கட்டி அதை அரசுக்குக் கொடுத்த நரசிம்ம நாயுடு இன்று மறைந்தார். இவர் 'சுதேச அபிமானி' என்னும் இதழைத் தொடங்கி ஏழைகள் படும் துயரையும் அரசு ஊழியர்கள் ஏழைகளுக்கு இழைக்கும் கொடுமைகளையும் பற்றி எழுதி வந்தவர். 94 நூல்களுக்கு மேல் எழுதிய இவர் ஆங்கில அரசாங்கம் தந்த ராவ் பகதூர் பட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர். 



ஜனவரி 21,1972 

மேகாலயா மாநிலம் உருவானது. அஸ்ஸாமின் மலைப்பகுதி மாவட்டங்களைப் பிரித்து இம் மாநிலம் உருவாக்கப்பட்டது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடமாக இருந்த சிரபுஞ்சி இந்த மாநிலத்தில் தான் உள்ளது. ஷில்லாங் இந்த மாநிலத்தின் தலைநகர்.

ஜனவரி 21, 2002

வீடு -  பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட ஒரு  ஆழமான திரைப்படம்.  அதில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்.   பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான அவர் மறைந்த நாள் இன்று.  
அவர் ஒரு நல்ல பாடகரும் கூட.  இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம்  ஆகிய படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் இவர்.

ஜனவரி 21, 2013
மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரான  எம். எஸ். உதயமூர்த்தி  மறைந்த நாள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...