Skip to main content

ஜனவரி 3

 ஜனவரி 3, 1558 

பஞ்சாபில் அமிர்தசரசில் பொற்கோவில் உள்ளது எல்லோருக்கும் தெரியும். இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது இன்று தான். இந்தக் கோயிலைக் கட்ட அடிக்கல் நாட்டியவர் மியான்மிர் எனும் ஒரு முஸ்லிம் துறவி.



 ஜனவரி 3, 1730 

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இராணி வேலு நாச்சியார் பிறந்த நாள். 

இராணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதிசக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். இவர் பல மொழிகள் கற்றதோடு  ஆயுதப் பயிற்சியும் பெற்றார்.

1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவருடன் திருமணம் நடந்தது

1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர்  அவரது பல வீரர்களுடன் அந்தப் போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல்-விருப்பாச்சி சென்றார்.

இராணி வேலு நாச்சியாரும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியாரும் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.


சில காலம் கழித்து  வேலுநாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கும் சின்னமருது நாட்டின் முதல்அமைச்சராகப்  வெள்ளைமருது நாட்டின் தலைமைத் தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது

இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத் தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருது சகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை. (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).

ஜனவரி 3, 1760

வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்த நாள்.  

ஜனவரி 3,1888 

குளிர்பானங்களைக் குடிக்க உதவுகின்ற ஸ்ட்ரா கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமம் வழங்கப்பட்டது.



ஜனவரி 3,1968 

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் கோலாகலமாக இன்று தொடங்கியது. மாலையில் நடந்த அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் துவக்கி வைத்தார்.

ஜனவரி 3,1972 

உரைநடை மற்றும்  நாடகாசிரியர் பெருமழைப் புலவர் 

பொ.வே.சோமசுந்தரனார் மறைந்த நாள்.

அவர் பிறந்த ஊர் மேலப் பெருமழை. அதுவே அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது.  

ஜனவரி 3, 2002 

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் சதீஷ் தவான் மறைந்த நாள்.  1972 ஆம் ஆண்டு இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்தார்.  இவரது நினைவாகத் தான்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ  ஆய்வு மையத்துக்கு சதீஷ் தவான் மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...