Skip to main content

ஜனவரி 23

 ஜனவரி 23,1810 

மின்பகுப்பு முறையில் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் முதன் முதலில் பகுத்துக் காட்டிய ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி வில்ஹெல்ம் ஜோஹன்ரிடர் இன்று காலமானார்.

ஜனவரி 23,1836 

குரோமோசோம், நியூரான் என்னும் இரண்டு அடிப்படை அறிவியல் கலைச்சொற்களைத் தந்த ஜெர்மனியை சார்ந்த ஹென்ரிச் வில்ஹெல்ம் வால்டெயர் ஹார்ட்ஸ் இன்று காலமானார்.

ஜனவரி 23,1897 

தேசப்பற்றுடைய ஒவ்வொருவரும்  அறிந்திருக்கவேண்டிய தலைவர்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்.

ஜனவரி 23,1901 

செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியை அச்சிடுவது என்ற பழக்கம் இன்றுதான் துவங்கியது. விக்டோரியா மகாராணியின் மரணச் செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் இப்படி வெளியிட்டது.

ஜனவரி 23,1924 

லெனின் ஜனவரி 21 ஆம் தேதி இறந்து விட்டார் என்று இன்று  சோவியத் யூனியன் (ரஷ்யா) அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜனவரி 23,1926 

பால் தாக்ரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே பிறந்த நாள். மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியக் கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் இவர். 

ஜனவரி 23,1941 

நைலான் நூலிழை இன்று தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நைலான் ஸ்பின்னர்ஸ் என்னும் நிறுவனம் நைலான் நூலிழைகளை இன்று தயாரித்தது.

ஜனவரி 23,1957 

சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இன்று அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 23,1965 

துர்க்காபூர் இரும்பு எக்குத் தொழிற்சாலை இன்று தான் துவங் கப்பட்டது.


ஜனவரி 23,1967 

கர்நாடக இசை மேதை அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் இன்று காலமானார்.

ஜனவரி 23,1967 

கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஜாவா மொழியின் முதற் பதிப்பு இன்று வெளியானது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...