Skip to main content

பிப்ரவரி 1

 பிப்ரவரி 1, 1840 

முதன்முதலாக பல் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் பெயர் பால்டி மோர் பல் மருத்துவக் கல்லூரி.

பிப்ரவரி 1, 1873

தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் இன்று தான் பிறந்தார்.

பிப்ரவரி 1, 1873 

கடலியலின் தந்தை என்று கருதப்படும் அமெரிக்க கடலியலார் மாத்யூ போன்டைன் மௌரி இன்று காலமானார்.

 பிப்ரவரி 1, 1876

தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைந்த தினம் . 

பிப்ரவரி 1, 1884

20 ஆண்டுகால உழைப்பிற்குப் பின்பு இன்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. 1864ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் இது தொகுக்கப்பட்டது.

 


பிப்ரவரி 1, 1893 

நியூஜெர்மனியில் எடிசன் லேபரட்டரியில் முதல் சினிமா ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 1,1903

நீர்ம இயக்கவியலில் ஸ்டோக்ஸ் விதியை அளித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சர்.ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் இன்று காலமானார்.

பிப்ரவரி 1,1925

பர்தோலியில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 1,1927 

குழந்தைத் திருமண தடை மசோதாவை ஹர்பிலாஸ் சாரதா சமர்ப்பித்தார். இந்த மசோதா 23ஆம் தேதி சட்டமானது.

இந்தச் சட்டமே சாரதா சட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

பிப்ரவரி 1,1942 

சைவத் துறவியும் உரையாசிரியருமான ஞானியார் அடிகள் மறைந்த தினம்.

பிப்ரவரி 1, 2003

கல்பனா சாவ்லா மறைந்த தினம்.

விண்வெளி ஆய்வினை முடித்து பூமிக்குத் திரும்பிய கொலம்பியா விண்வெளி ஓடம் வெடித்துச் சிதறியது. அதிலிருந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...