Skip to main content

ஜனவரி 15

ஜனவரி 15,1841

முல்லைப்   பெரியாறு அணையைக்  கட்டி முடித்த ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள்.



ஜனவரி 15,1892

டாக்டர் ஹெய்ஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட (Basketball) கூடைப்பந்தாட்டம் என்னும் புதிய விளையாட்டின் விதிமுறைகள் Triangle என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.

ஜனவரி 15,1892

மயிலை சிவ. முத்து என்னும் பேராசிரியர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி பிறந்த நாள். 

இசைப்பாடகர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர், இதழாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் இவர்.

ஜனவரி 15,1917

நகைச்சுவை  நடிகர். டணால் தங்கவேலு  பிறந்த நாள். 

இவரது உண்மையான பெயர் கா. அ. தங்கவேலு. 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை  நடிகராக வலம்வந்தவர். 

சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் இவர் பெரும்புகழ் பெற முக்கியமான காரணம்.


ஜனவரி 15,1949

ஜெனரல் கே. எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவரே.

எனவே இந்த நாள் படையினர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 15,1965 

கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான  தஞ்சை இராமையாதாஸ் மறைந்த நாள். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். 

இவர் எழுதிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. 

அவற்றுள் சில:

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ ...

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... 

கல்யாண சமையல் சாதம் ...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே ...

வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க...

ஜனவரி 15,1981 

தேவநேயப் பாவாணர் மறைந்த நாள். 

நாற்பது மொழிகளின் சொல்லியல்புகளை ஆராய்ந்து தனித்தமிழ் சொல்வளம் குறித்து விரிவான நூல்களை இவர் எழுதியுள்ளார். தன்னுடைய மாணவரான பெருஞ்சித்திரனார் வழங்கிய 'மொழிஞாயிறு' என்ற அடைமொழியை பெருமையுடன் ஏற்றுக்கொண்டவர்.

ஜனவரி 15,1998

இந்திய வரலாற்றில் ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரரான முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தா மறைந்த நாள். 

இவர் இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொருமுறையும் 13 நாட்கள் என மொத்தம் 26 நாட்கள்  பிரதமராக இவர் இருந்துள்ளார். 

1964 இல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்காலப் பிரதமராக பதவி வகித்தார்.

ஜனவரி 15, 2025

144  ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இன்று தொடங்கியது. பிப்ரவரி 26  வரை 44  நாட்கள் நடந்த இந்த விழாவில் 66 .21  கோடி பக்தர்கள் புனித நீராடினர். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...