Skip to main content

ஜனவரி 17

 ஜனவரி 17, 1691

ரத்தத்தில் ஏதோ ஒன்றை சேர்ப்பதற்காகத்தான் சுவாசித்தல் நடைபெறுகிறது என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சார்ந்த ரிச்சர்ட் லோயர் என்ற ஒரு மருத்துவர் அறிஞர் . இவர் தான் முதன்முதலாக ரத்தத்தை மாற்றுவதற்கு முயன்றவர். அவர் இன்று லண்டனில் காலமானார்.

ஜனவரி 17,1705 

தாவர வகைகளைப் பற்றி மூன்று தொகுதிகள் கொண்ட ஹிஸ்டாரிக்கா பிளான்ட்ரம் HISTORICA PLANTRUM என்னும் கலைக்களஞ்சியத்தை எழுதிய பிரிட்டனைச் சேர்ந்த ஜான்ரே இன்று காலமானார்.

ஜனவரி 17,1706 

பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம். ஒரு  விஞ்ஞானி எழுத்தாளராக அரசியல்வாதியாக   இலக்கியவாதியாக வியாபாரியாகவெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான மனிதர் இவர்.  

இன்றைய  அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.  அறிவியல் பாடத்திலும் அமெரிக்க வரலாற்றிலும் இடம்பெற்ற ஒரு புகழ்பெற்ற பெயர் பெஞ்சமின் பிராங்கிளின்.

ஜனவரி 17,1978 

நம் நாட்டில் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 17,1917

 தமிழக முன்னாள் முதல்வர் M.G.இராமச்சந்திரன் பிறந்த நாள். 



ஜனவரி 17,1981 

மிசோரம் தனி மாநிலமாக உதயமானது.

ஜனவரி 17, 2005

சென்னை கம்பன் கழகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தவருமான மு.மு. இஸ்மாயில் மறைந்த நாள். 

ஜனவரி 17, 2010

நீண்ட காலம் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரிய ஜோதி பாசு மறைந்த நாள்.  1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தவர் இவர். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...