Skip to main content

Posts

Showing posts from February, 2025

மார்ச் 2

மார்ச் 2, 1896 ரா.பி.சேதுப்பிள்ளை  பிறந்த நாள்.    அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையைப்   பாராட்டி தருமபுர ஆதீனம் 1950-ஆம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருதை   வழங்கியது. மார்ச் 2, 1931 ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் கடைசி ஆட்சித் ஜனாதிபதியாக  இருந்த  மிக்கைல்  கொர்பச்சோவ்  பிறந்த நாள்.  1990இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மார்ச் 2, 1935   வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான  குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள்.  கர்நாடக இசையை வயலினில் வாசித்தவர்களுள் இவர் முக்கியமானவர். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் இவரது தனி அடையாளம்.   சங்கீத ஞானம் இல்லாமலும் வயலின் இசையை ரசிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் இவர். மார்ச் 2, 1949  இந்தியாவின் கவிக்குயில் என்று மகாத்மாவால் அழைக்கப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னருமான சரோஜினி நாயுடு இன்று காலமானார். மார்ச் 2 1984  கொடைக்கானலில் அ...

மார்ச் 1

 மார்ச் 1 1639  சென்னை மாநகராட்சியின்  பிறந்த நாள் இது என்று சொல்லலாம்.  கூவம் நதிக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு பண்டகசாலையை நிறுவினார்கள். அந்தப் பண்டக சாலையைச் சுற்றி பின்னாளில் கட்டிய கோட்டை தான் செயின் ஜார்ஜ் கோட்டை. மார்ச் 1,1640  செயின் ஜார்ஜ் கோட்டை இன்று தான்  கட்ட ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1.1869 வேதியியலில்  மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவு செய்து வெளியீட்டுக்கு ஒப்புதல் அளித்தார்.   மார்ச் 1.1873   முதலாவது  தட்டச்சுப் பொறியை (Typewriter) ரெமிங்டன் சகோதரர்கள் நியூயார்க்கில் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். மார்ச் 1.1896  வேதியலில் ரேடியோ வேதியியல் துறை பிறந்தநாள்.  பொட்டாசியம் சல்பேட்டின் தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்யும் போது இயற்கையாகவே அதற்கு கதிர்வீச்சுத்  தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒளிப்படத் தகட்டின் மீது  அது வினை புரிவதும்  தெரிந்தது.  இந்தக் கண்டுபிடிப்புத் தான் ரேடியோ வேதியல் துறை என்ற ஒரு புதிய துறை பிறக்க வழி வகுத்தது. மார்ச் 1,19...

பிப்ரவரி 28

    பிப்ரவரி 28 ,1918  கணித மேதை ராமானுஜம் ராயல் சொசைட்டியில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி 28 ,1921 புகழ் பெற்ற நாவலாசிரியர் தி.ஜானகிராமன் பிறந்த நாள். இவர் எழுதிய    மோகமுள், மரப்பசு போன்ற நாவல்கள் காலம்கடந்தும் புகழ்பெற்றவை.  பிப்ரவரி 28 ,1927  எழுத்தாளர் மற்றும் கவிஞர் சௌந்தரா கைலாசம்  பிறந்த நாள்.  Pகவிதைகளில் சிலேடை நடையை லாவகமாக அமைத்து இவர் எழுதிய கவிதைகள் இவருக்கு தனி இடத்தை அளித்தன.  அக்டோபர் 15, 2010  இவர் மறைத்த நாள்.  பிப்ரவரி 28 ,1928  ஒளி உட்புகு தன்மையுடைய திட, திரவ, வாயுப் பொருள்களின் வழியே ஒளி செல்லும் போது அதன் தன்மையில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டுபிடித்ததாக நம் நாட்டு அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் அறிவித்தார். இந்தக் கண்டுபிடிப்பு தான் இன்று ராமன் விளைவு என்று குறிப்பிடப்படுகிறது. பிப்ரவரி 28 ,1936 இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு மறைந்த நாள்.   பிப்ரவரி 28 ,1948  இன்று பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை விட்டு வெளியேறின. பிப்ரவரி 28 ...

பிப்ரவரி 27

  பிப்ரவரி 27, 1897  சாக்கரின் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. பால்டிமோரில் உள்ள ஜான்ஹாப் கிங்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கான்ஸ்டன்ட்டைன் பால் பெர்க் என்பவராலும் பேராசிரியர் ஐரா ராம்சன் என்பவராலும் சாக்கரின் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27, 2008 எழுத்தாளர் சுஜாதா மறைத்த நாள்.

பிப்ரவரி 26

  பிப்ரவரி 26, 1815  எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் அங்கிருந்து இன்று தப்பிச் சென்றார். பிப்ரவரி 26, 1935 ரேடாரின் செயல் திறனை ராபர்ட் வாட்சன் வாட் இன்று செய்து காட்டினார். அப்போது இதற்கு ரேடார் என்ற பெயர் வைக்கப்படவில்லை. அமெரிக்கா கடற்படையைச் சார்ந்த கமாண்டர் எஸ்.எம்.டக்கர் என்பவர் தான் இதற்கு ரேடார் என்ற பெயரைச் சூட்டினார். இதற்கு முன்பே ஜெர்மன் கடற்படையைச் சார்ந்த ரூடால்ப் இத்தகைய கருவியைக் கண்டுபிடித்தார் என்றாலும் பயன்படுகின்ற வகையில் முதன் முதலில் செய்தவர் வாட் தான். பிப்ரவரி 26,1947   கவிஞர் தாராபாரதி  பிறந்த நாள்.   "கவிஞாயிறு " என்ற அடைமொழியால் அழைக்கப்பட்ட இவருடைய இயற்பெயர்  இராதாகிருஷ்ணன். பிப்ரவரி 26,1966  "அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு கோடி வீரர்கள் அடங்கிய வலிமைமிக்க படைபலம் நமக்குத் தேவை" என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் பம்பாய் பொதுக்கூட்டத்தில் முழங்கியவரும் "இந்த வீரரின் தீர்க்கதரிசனத்தால் தான் நாட்டுப்பற்று மிகுந்த ஆண் பெண்கள் அடங்கிய இந்திய தேசிய ராணுவத்த...

பிப்ரவரி 24

பிப்ரவரி 24,1920 உலகின் மிக வயதான யோகாசன ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றிருந்த  நானம்மாள் பிறந்த தினம். கோவையைச் சேர்ந்த இவர் 98 வயதான போதும்   யோகாசன பயிற்சி ஆசிரியராக விளங்கியவர்.  பிப்ரவரி 24,1938 நைலான் இழைகள் பயன்படுத்தப்பட்ட பல் துலக்கப் பயன்படுகின்ற பிரஷ் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டது. பிப்ரவரி 24,1948 தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள்.   பிப்ரவரி 24, 1955-  ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும்  தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்த  ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள். பிப்ரவரி 24,1986 கலாசேத்திரா  நடனப் பள்ளியினை நிறுவிய  ருக்மிணி தேவி அருண்டேல் மறைந்த நாள்.  பரதநாட்டியம் சாதாரண மக்களும் பயிலக்கூடிய உன்னதமான கலை  என்ற நம்பிக்கையை எல்லோருடைய மனதிலும் விதைத்தவர் இவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டவர் இவர். 

பிப்ரவரி 23

பிப்ரவரி 23, 1633 உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் சாமுவேல் பெப்பீசு இன்று தான் பிறந்தார்.  1660-1669 காலப்பகுதியில் ஓர் இளைஞராக பெப்பீசு தினம்தினம் எழுதி  வந்த நாட்குறிப்பு புகழ் பெற்ற ஒரு படைப்பாகும்.  பிப்ரவரி 23, 1821  ஆங்கில பெருங்கவிஞர் ஜான் கீட்ஸ் காலமானார். பிப்ரவரி 23, 1905 ரோட்டரி சங்கம் இன்று தான் தொடங்கப்பட்டது. ரோட்டரி சங்கத்தைத் தொடங்கியவர்  பால் பி ஹாரிஸ்.  மூன்று வர்த்தக நண்பர்களுடன் சிகாகோ நகரில் உள்ள டியர்பார்ன் தெருவில் உள்ள ஹாரிசின் நண்பர் கஸ்டவ் ஈ லோஹிர் என்பவரின் அலுவலகத்தில் பிப்ரவரி 23, 1905 அன்று கூடி ரோட்டரி சங்கத்தைத் துவக்கினர். பிப்ரவரி 23,1992  பிரபல தொழில் அதிபர் H.C.கோத்தாரி சென்னையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 74.  

பிப்ரவரி 22

  பிப்ரவரி 22, 1815  கார்பனின் ஒரு வடிவமே வைரம் என்று கூறியவரும் இருடியம், ஆஸ்மியம் என்னும் இரண்டு புதிய தனிமங்களை கண்டுபிடித்தவருமான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்மித்சன், பிரான்ஸில் போவ்ளோகன் என்னும் இடத்தில் ஒரு மரப்பாலத்தைக் குதிரை மீது கடக்கும்போது பாலம் முறிந்து விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தார். பிப்ரவரி 22, 1857    சாரணர் இயக்கத்தை  நிறுவிய பேடன் பவல்  பிறந்த நாள்.  பிப்ரவரி 22, 1898  தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளும் மறைந்த நாளும்   ஒரே தேதி  பிப்ரவரி   22.    மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் இவர். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி   இவர்.    இவர் பிறந்த நாள் 22.2.1898.   மறைந்த நாள் 22.2.1914. பிப்ரவரி 22,1943 ஆன்டிபயாட்டிக் (antibiotic) என்ற சொல்லுக்கு இன்றைய நாள் மிகுந்த தொடர்புடையது. ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டாக்டர் செல்மன் வேக்ஸ்மானும் ...

பிப்ரவரி 21

  பிப்ரவரி 21, 1804 நீராவியால் இயங்கிய முதல் ரயில் இன்ஜின் இன்று  வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது. பிப்ரவரி 21, 1851  திருடர்களோ அந்நியர்களோ நுழைந்தால் மணி அடித்து எச்சரிக்கை செய்யும் பர்க்லர்ஸ் அலாரம் என்னும் எச்சரிக்கை மணி பாஸ்டனில் இன்று முதன்முதலாக அமைக்கப்பட்டது. பிப்ரவரி 21, 1952  'அனைத்துலக தாய்மொழி நாள்' என்று இந்நாளை  அறிவிக்க யுனெஸ்கோ அறிவிக்க இன்று நடந்த ஒரு நிகழ்வு தான் காரணம்.  கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தைக் கலைக்க காவல்  துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாள் தாய்மொழிக்காக நடந்ததால்   யுனெஸ்கோவினால்  பின்னொரு நாள் அனைத்துலக தாய்மொழி நாள் என இந்த நாள் அறிவிக்கப்பட்டது.

Work is our greatest guru

  Work is our life long companion as well as our greatest teacher. There are many things which cannot be taught they can only be learnt. A Good musician never misses daily practice. A right teacher will equip himself everyday by learning new. Work teaches us many things about our tasks, about our subordinates, colleagues and superiors and even more importantly about ourselves. Work is a hard task master. It disciplines us. We understand ourselves better through our work. Through our hard and devoted work we realise our own limitations and discover our unknown aptitudes, attitudes and skills. Work alone can teach us how to organise and execute things properly. Through systematic work only we learn when to work and whe n to stop work.

பிப்ரவரி 20

  பிப்ரவரி 20,1841 தூக்கம் வரவைக்கும் மருந்தைக் கண்டுபிடித்த வில்ஹம் ஆடம் பெர்டினாண்ட் ஜெர்மனியில் இன்று காலமானார். அந்த மருந்துக்கு அவர் ரோமர்களின் தூக்கக் கடவுளான மார்பியசின் பெயரால் அதற்கு மார்பின்(Morphine) என்று பெயரிட்டார். பிப்ரவரி 20,1876   தமிழகத்தின் சிறந்த புலவராகவும், தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிய பண்டிதர் கா. ரா. நமச்சிவாய முதலியார் பிறந்த தினம்.  பிப்ரவரி 20,1878   சிவக்கவிமணி என்று போற்றப்படும் சி. கே. சுப்பிரமணிய முதலியார் பிறந்த தினம்.  தொழில் முறை வழக்கறிஞராக இருந்த போதும் மிகச்சிறந்த  தமிழறிஞராக மிளிர்ந்தவர். பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர் இவர்.  சிரமமான நேரங்களில் இவர் செய்த உதவியை மறக்காத செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்  தன்  ஒரு மகனுக்கு  சுப்பிரமணியன் என்ற இவருடைய  பெயரையும்  தன் மகளுக்கு சிவக்கவிமணியின் மனைவியான மீனாட்சியின் பெயரையும் சூட்டி தன் நன்றியுணர்வால்  சிவக்கவிமணியை நெகிழ வைத்தார்.   பிப்ரவரி 20,1947  மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைச...

பிப்ரவரி 19

  பிப்ரவரி 19,1855 தமிழ்த் தாத்தா என்று புகழ் பெற்ற உ. வே. சாமிநாதையர் பிறந்த நாள். கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல் உண்ணப் பசியெழுவ தோராமல்- எண்ணி எண்ணிச் செந்தமிழ்த் தாய்க்கு நீ செய்த திருத்தொண்டுக்கு இந்த நிலத் துண்டோ இணை ? (உ. வே. சா   குறித்து கவிமணி...) உ.வே.சாமிநாதய்யர் அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு, தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தவர்.  90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3000 ஏட்டுச்சுவடி, கையெழுத்து ஏடுகளையும் வைத்திருந்தார். சீவக சிந்தாமணி போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று அதை பதிப்பில் கொண்டுவந்தவர் இவர்.  சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார். பிப்ரவரி 19,1878   கிராமபோன் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் இன்று அதற்கான காப்புரிமம்  பெற்றார். பிப்ரவரி 19,1915 கோபால கிருஷ்ண கோகலே மறைந்த நாள். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் க...

பிப்ரவரி 18

  பிப்ரவரி 18,1564  உலகப் புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியும் கட்டடக்கலை வல்லுநருமான இத்தாலியைச் சார்ந்த மைக்கேல் ஏஞ்சலோ காலமானார். பிப்ரவரி 18,1688  பில்கிரீம்ஸ் புரொகிரஸ் என்னும் நாவலின் ஆசிரியரும் ஆங்கில நாவல் இலக்கிய முன்னோடியுமான ஜான் பனியன் காலமானார். பிப்ரவரி 18,1745 இவர் மட்டும் இல்லாதிருந்தால் மின்அழுத்தம்  என்ற வார்த்தையே நமக்கு தேவைப்பட்டிருக்காது. முதல் மின்கலத்தை இவர் தான் உருவாக்கினார். நாம் இன்று பயன்படுத்தும் வோல்ட் (volt), வோல்ட்மீட்டர்   (Voltmeter) போன்ற வார்த்தைகள் இவர் பெயரைத்தான் குறிக்கின்றன.   அவர் பெயர் அலெசான்றோ வோல்ட்டா (Alessandro Volta). அவர் இன்று தான் பிறந்தார்.  மீத்தேன் என்ற வாயுவைக் கண்டறிந்தவரும் இவர் தான்.  பிப்ரவரி 18,1836   விவேகானந்தரின் குருவான  ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்.  ஒவ்வொரு மதமும்  ஒரே இறைவனை அடைய    வெவ்வேறு வழிகளைச்  சொல்லித்தருகிறது  என்பதை  வலியுறுத்திய மகான் இவர். பிப்ரவரி 18,1926   தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துண...

பிப்ரவரி 17

  பிப்ரவரி 17, 1863  ஜெனீவாவில் இன்று  பொதுமக்கள் சிலர் சேர்ந்து போரில்  காயமடைந்தோர்க்கான சிகிச்சை மற்றும்  நிவாரணக் குழுவை  அமைத்தனர். இந்தக் குழு தான்  பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.  எனவே இந்த நாள் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்ட நாள் என்று குறிப்பிடப்படுகிறது.  பிப்ரவரி 17, 1897  ரூடால்ப் டீசல் கண்டுபிடித்த எஞ்சின் பெட்ரோலியம் ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி முதன் முதலாக இன்று ஓட தொடங்கியது. பிப்ரவரி 17, 1936 சிறுவர்களுக்கான புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் மாயாவி ( The Phantom) முதல் தடவையாக சித்திரக் கதைகளில் இடம்பெற்றது.    தினமணி கதிர், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் ஆகியவற்றில் மாயாவி சித்திரக்கதைகள் வெளிவந்தன. மாயாவி சித்திரக் கதைகள்  தொலைக்காட்சித் தொடராகவும்  திரைப்படங்களாகவும் வெளிவந்தன.  பிப்ரவரி 17, 1956   தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை மறைந்த நாள். இருபதாம் நூற்றாண்டின்  தமிழ் ஆராய்ச்சியாளர்களில்  குறிப்பிடத்தக்க ஒருவர் இவர்.  திறனாய்வாளர்,...

பிப்ரவரி 16

  பிப்ரவரி 16, 1471  விஜயநகரப் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவராக இருந்த கிருஷ்ண தேவராயர் பிறந்த தினம்.  போர்சிகீசிய யாத்திரிகர் டொமிங்கோ பயஸ் (Domingos Paes), மற்றும்  நுனிஸ் (Nuniz) ஆகியோரின் குறிப்புகள் மூலமாகவே கிருஷ்ண தேவராயர் பற்றிய நிறைய விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.   தெனாலிராமன் கதைகள்  மூலமாக  இந்தியா முழுவதும் இன்றும் பேசப்படுவர் இவர்.  தொலைக்காட்சித் தொடர்களும் இவரை இன்றும் புகழோடு வைத்திருக்கின்றன.  பிப்ரவரி 16, 1954  இலக்கிய அறிஞர் ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார் காலமானார். பிப்ரவரி 16, 1957  எலக்ட்ரானின் மின் சுமையை அளந்து கூறியவரும் வாயுக்களின் மின்விசை ( Electricity in Gases) எனும் நூலை எழுதியவருமான ஜான் சீலி எட்வர்ட் காலமானார். பிப்ரவரி 16,  2006  பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம்  மறைந்த நாள்.  கவிதை அரங்கேறும் நேரம் மலர்க் கணைகள் பரிமாறும் தேகம் இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும் ... ஜெயச்சந்திரன், ஜானகி குரல்களில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வரும் அழகா...

பிப்ரவரி 15

  பிப்ரவரி 15, 1564 வானியல் வல்லுநர் கலீலியோ கலிலி பிறந்த நாள்.  இத்தாலியில் பிறந்த இவர் இயற்பியலாளர், கணிதவியலாளர், பொறியாளர், மெய்யியலாளர் என பல துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்தவர். பிப்ரவரி 15, 1680 ரத்த சிவப்பணுக்களைக் கண்டுபிடித்து விவரித்த விஞ்ஞானி ஜான்ஸ்வாம்மெர்டாம் காலமானார். நிணநீர் நாளங்களில் வால்வுகள் இருப்பதைக் கண்டுபிடித்தவர் இவரே. அந்த வால்வுகள் இவரது பெயரால் குறிப்பிடப்படுகின்றன. மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட பூச்சி இனங்களின் உடற்கூறு, இனப்பெருக்கம், வாழ்க்கை அட்டவணை ஆகியவற்றைப் பற்றி இவர் விவரித்துள்ளார்.   பிப்ரவரி 15, 1852 இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய ரயில் என்ஜின்கள் முதன் முதலாக பம்பாயில் வண்டிகளை இழுத்து வந்ததை இன்று மக்கள் வியப்போடு பார்த்தனர்.   பிப்ரவரி 15,1877 சூரிய அஸ்தமனம், சந்திர கிரகணம் ஆகியவை இன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.    பிப்ரவரி 15,1946 எனியாக் (Electronic Numerical Integrator  Analizer and Computer -ENIAC) என்ற முதல் தலைமுறைக் கம்ப்யூட்டர் பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் இன்று அற...

பிப்ரவரி 14

  பிப்ரவரி 14, 1556  அக்பரின் தந்தை மரணமடைந்தார் என்ற செய்தி வந்தவுடன் பைராம் கான் அங்குள்ள தோட்டத்தில் அக்பரை அரியணையில் அமர்த்தி மன்னராக இன்று பிரகடனம் செய்தார். பிப்ரவரி 14,1790  பாஞ்சாலங்குறிச்சி மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் முடி சூட்டிக்கொண்டார்.   பிப்ரவரி 14,1798  பெரிலியம் என்னும் தனிமத்தைக் கண்டுபிடித்ததாக பாரிஸ் அகாடமி ஆப் சயின்ஸ்க்கு பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி எல்.வாக்கியுலின் இன்று அறிவித்தார். பிப்ரவரி 14,1924  ஐபிஎம் நிறுவனம் (IBM)  இன்று தான் தொடங்கப்பட்டது.    பிப்ரவரி 14,1952   முன்னாள் வெளியுறவுத்துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  பிறந்த நாள்.  மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகவும்  டில்லியின் முன்னாள் முதலமைச்சராகவும்  இருந்த பெருமைக்குரியவர் இவர்.    பிப்ரவரி 14,1998   கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.  கோவை தொகுதியில் போட்டியிட்ட  சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக அத்வானி பிப...

பிப்ரவரி 13

  பிப்ரவரி 13, 1879 கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என பன்முக அடையாளம் கொண்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு    பிறந்த நாள். பிப்ரவரி 13, 1907  காஞ்சி பரமாச்சாரிய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் இன்று 68 வது பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார். பிப்ரவரி 13, 1920 திரைப்படப் பாடலாசிரியர்  மருதகாசி பிறந்த  தினம்.   A. M. ராஜா , P. சுசீலா இணைந்து பாடிய  வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே  ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!   என்ற பாடலைக் கேட்கும் எவரின்  மனமும் உருகிப்போகும்.  அந்தப் பாடலை எழுதியது மருதகாசி தான்.  இவர் நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே  என்றும் நம்ம வாழ்க்கையில் பஞ்சமேயில்ல .... என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் குரலில் கேட்டிருப்போம். அதுவும் மருதகாசியின் பாடல் தான்.  பிப்ரவரி 13, 1929 பென்சிலினியம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை டாக்டர் அலெக்ஸாண்டர் பிளமிங் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் இன்று படித்தார்.  பிப்ரவரி...