Skip to main content

மே 8

 மே 8,  1794 

நவீன வேதியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்சு விஞ்ஞானி லாரன்ட் லவாய்சியா  பாரிசில் காலமானார். 


எரிதல் Burning  என்பது ஆக்சிஜன் உதவியுடன் தான் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்துக் கூறியவர் இவர். 

பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆனால் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் இவர் நிரூபித்தார்.

மே 8, 1901 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த வறட்சி காரணமாக இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நிலைமையை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அரசு அமைத்த குழு ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டது.  இதில் பஞ்சம் காரணமாக 12 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மே 8,1915 

ந்திய விடுதலைப் போராட்ட வீரர் அமின் சந்த் இன்று தூக்கிலிடப்பட்டார். 

மே 8,1916

உலகமெங்கிலும் இந்தியப் பண்பாட்டையும் ஆன்மிக ஞானத்தையும்  உலகமெல்லாம் பரப்பிய சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள். 

மே 8,1980 

பெரியம்மை நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

மே 8,1980 

தமிழறிஞர் மயிலை.சீனி வேங்கடசாமி காலமானார்.

மே 8, 2005

வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்ட வலம்புரி ஜான் மறைந்த நாள். 

'பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்று அடிக்கடி சொல்லிவந்தவர். ஒவ்வொரு நாளும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். 

நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் என்று அரசியல் அரங்கிலும் வலம் வந்தவர். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...