Skip to main content

மே 3

 மே 3, 1788

முதல் மாலை நாளிதழ் ஸ்டார் லண்டனிலிருந்து வெளிவரத் துவங்கியது.

மே 3,1899

பேனா மன்னன் என்று அழைக்கப்படும் T.S.சொக்கலிங்கம் பிள்ளை பிறந்த நாள். இவர் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்.  டால்ஸ்டாயின் War and Peace என்ற நாவலை போரும் அமைதியும் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் இவர் .  தினமணி நாளிதழின் உருவாக்கத்துக்கு இவர் முக்கியமான பங்காற்றியவர். தமிழில் நவீன இலக்கியம் உருவாக வழியமைத்தவர். மணிக்கொடி இதழ், நவயுகம் பிரசுரம் ஆகியவை அவருடைய சாதனைகள்.

மே 3,1913

முதல் இந்தியத் திரைப்படமான ராஜா அரிச்சந்திரா பம்பாயில் காரனேசன் சினிமாட்டோகிராப் திரையரங்கில் திரையிடப்பட்டது.

மே 3, 1917

சிப்பாய் கலகம் இன்று ஏற்பட்டது.

மே 3, 1935

எழுத்தாளர் சுஜாதாபிறந்த நாள். 

சுஜாதா எனும் புனைபெயரில்  எழுதி வந்த இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கராஜன். பொறியாளரான இவர் எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  இலக்கியமாகவும் இலக்கியம் தாண்டியும் இவருடைய படைப்புகள் பேசப்பட்டன.  100க்கும் மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள்,சில  நாடகங்கள் மற்றும்  கவிதைகளை எழுதியுள்ளார்.  

திரைப்படத் துறையிலும் வெற்றிகரமான ஆளுமையாக வலம் வந்தவர். ரோஜா, இந்தியன், அந்நியன், முதல்வன், ஜீன்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், எந்திரன் என இவர் கைவண்ணத்தால் உயிர்பெற்ற பல படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

மே 3, 1945

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிரபல நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் தமிழ் திரைப்பட உலகின் அன்றைய முடி சூடா மன்னர் எம்கே தியாகராஜ பாகவதருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

 மே 3,1969 

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. 

மே 3,1969

இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன் காலமானார்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...