Skip to main content

மே 16

 மே 16, 1843 

தந்தி அனுப்பும் முறைக்கு காப்புரிமம் பெற்ற வில்லியம் ஹூக் என்பவரிடமிருந்து ஹோம் என்பவர் ஆண்டு வாடகைக்கு உரிமம் வாங்கி வாணிப நோக்குடன் முதல் தந்தியை இன்று அனுப்பினார்.  பாட்டிங்டன் என்னும் இடத்திலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோ என்னும் ஊருக்கு இன்று முதல் தந்தி அனுப்பப்பட்டது.

மே 16, 1921 

கணையத்தின்  ஹார்மோன் சுரக்கும் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சியை சர் கிராண்ட் பாண்டிங்கும்  சி.ஹெச். பெஸ்ட்டும் ஆரம்பித்த நாள் இன்று.  இந்த ஆராய்ச்சியின் முடிவு தான் இன்சுலின் கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயினால் அவதிப்படுவோரின் தொல்லையைப் போக்குகின்ற மருந்து இன்சுலின் இப்படித்தான் பிறந்தது. 

மே 16, 1929 

சிறந்த திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு ஆஸ்கார் விருது முதன்முதலாக வழங்கப்பட ஆரம்பித்தது. அப்போது இந்த விருதுக்கு ஆஸ்கார் என்று பெயர் இல்லை.    

1931 ஆம் ஆண்டு இந்த விருது வழங்கும் மோசன் பிக்சர்ஸ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலக காப்பாளர் மார்க்கெட் சிலையை பார்த்துவிட்டு என்  என் சித்தப்பா ஆஸ்கார் போலவே உள்ளது என்றாராம். இது அந்த அகடமி முழுவதும் பரவி விருதின் பெயரே ஆஸ்கார் என்று ஆகிவிட்டது.

இந்த விருது பெற்ற முதல் திரைப்படம் வின்க்ஸ்  Wings சிறந்த நடிகர் ஜெர்மனியைச் சார்ந்த எமில் ஜானிங்; சிறந்த நடிகை ஜானட் கெயினர்.

மே 16, 1975 

ஜங்கோ தாபை (Junko Tabei) என்னும் ஜப்பானியப் பெண்மணி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் பெண்மணி என்று பெருமைக்கு இவர் தான் சொந்தக்காரர். 

மே 16, 1986 

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும்  அறிவியலைக் கதை போல கூறியவருமான பெ.நா.அப்புசாமி காலமானார்.

மே 16, 2010

எழுத்தாளர் அனுராதா ரமணன்  மறைந்த நாள். நாவல்களை மட்டுமன்றி பல சிறுகதைகளையும் எழுதிவந்தவர் இவர்.  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...