Skip to main content

மே 4

 மே 4,1799

திப்பு சுல்தான் போரில் உயிர்நீத்த தினம். 

மைசூரின் புலியென அழைக்கப்பட்ட திப்புசுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் பிரிட்டிஷ் படையால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இன்று கொல்லப்பட்டார்.  ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை பிரிட்டிஷாரால் முழுமையாக கைப்பற்றப்பட்டு யூனியன் ஜாக் கொடி பறக்க விடப்பட்டது. 

திப்புசுல்தானின் மைந்தர்களும் மற்ற உறவினர்களும் கைது செய்யப்பட்டு கைவிலங்கு கால்விலங்கு பூட்டப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தான்  பின்னர் வேலூர் புரட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.

மே 4,1854

இந்தியாவின் முதல் தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.

மே 4,1927 

அமெரிக்க திரைப்படத் துறையைச் சேர்ந்த 30 பேர் கூடி தரமான திரைப்படம் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் விருதுகள் கொடுக்கத் தீர்மானித்தனர். அதன்படி இந்த அகடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பை உருவாக்கினார். ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்குவது இந்த அமைப்புதான். 

மே 4, 1979

பிரிட்டனின் முதல் பெண் பிரதம மந்திரியாக திருமதி மார்க்கெட் தாட்சர் தேர்வு செய்யப்பட்டார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் இவர்.

மே 4, 1990

இந்தியாவின் முதல் சூரிய வெப்பத்தில் இயங்கும் மின் நிலையம் ஹரியானாவில் குவாய் பகாரி என்னும் இடத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...