Skip to main content

மே 10

 மே 10,1526

முதலாம் பானிபட் போரில் வென்ற பாபர் இன்று ஆக்ராவுக்குள் நுழைந்தார்.

மே 10, 1857 

சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷாரால் வர்ணிக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போர் மீரட்டில் துவங்கியது. இந்தப் போர் டெல்லிக்குப் பரவி மறுநாள் (மே 11ஆம் தேதி) பகதூர்ஷா மன்னராக அறிவிக்கப்பட்டார்.

மே 10,1901 

லண்டனில் ராயல் சொசைட்டி ஹாலில் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்கள் முன்னிலையில் நம் நாட்டின் அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை பல ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார்.


மே 10, 1932 -
தமிழ் மொழியின் கட்டுக்கோப்பான இலக்கணங்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்களை வெளியிட்ட இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பிறந்த நாள். 
 
மே 10,
1933 

நாஜி பிரச்சார அமைச்சர் கோயபல்சின்  தூண்டுதல் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெர்லினில் நள்ளிரவில் கூடி புத்தக எரிப்புப் போராட்டம் நடத்தினர்.  

ஜெர்மனியின் பண்பாட்டிற்குப் புறம்பான நூல்கள் என்று கூறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் மான் முதலான ஜெர்மனி எழுத்தாளர்கள் நூல்களையும் H.G.Wells, ஹெலன் கெல்லர், சிக்மண்ட் பிராய்ட் போன்றோர் எழுதிய நூல்களையும் கொளுத்தினர்.  ஏறக்குறைய 25 ஆயிரம் நூல்கள் தீக்கிரையாயின.

மே 10,1981 

தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து விடவே பிரதம மந்திரியான தன் தாயார் இந்திரா காந்திக்கு உதவி புரிய ராஜீவ் காந்தி அரசியலில் நுழைந்தார்.  அமேதி தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

மே 10,1994 

தென் ஆப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.

மே 10, 2019 

தமிழ், மலையாள மொழிகளில் படைப்புகளைத் தந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைந்த நாள். 

இவரது நாவலான  சாய்வு நாற்காலி  சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...