Skip to main content

மே 20

 மே 20, 1506 

புதிய உலகம் என்று கூறப்பட்ட அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் இன்று காலமானார்.

மே 20, 1851

ஆட்டோமொபைல் துறையில் முத்திரை பதித்த யமஹா நிறுவனத்தன் நிறுவனர் டொரகுசு யமஹா ஜப்பானில் இன்று பிறந்தார்.  

யமாஹா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் மட்டுமல்லாது இசைக்கருவிகள் உற்பத்தியிலும் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும். 

மே 20, 1894

காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் பிறந்த நாள்.


இவர் வழங்கிய அருளுரைகளில் இடம் பெற்ற தத்துவங்களின் தொகுப்பாக வெளிவந்த  தெய்வத்தின் குரல் எனும் நூல் ஒரு புகழ் பெற்ற நூலாகும். 

மே 20, 1932

விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திர பால் இன்று மறைந்தார்.

மே 20, 1932

தமிழ் அறிஞர்களில் பலரது பெயர்கள் கூட நமக்கு தெரிவதில்லை தொல்காப்பியர் சொல், பொருள், எழுத்து அதிகாரங்களைப் பதிப்பித்த சி.வை.தாமோதரன் பிள்ளையை பற்றி ஒரு சிலருக்காவது தெரியும். ஆனால் அவருக்கும் சற்று முன்னதாகவே இந்தத் துறையில் காலடி வைத்தவர் பவானந்தம் பிள்ளை. அப்படி ஒருவர் இருந்தாரா என்று தோன்றும்.

 தொல்காப்பியம்  நூலின்  மூன்றாம் இயலான பொருளதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர்  உரையையும் பேராசிரியர் உரையையும் பதிப்பித்து வெளியிட்டவர் இவர். தன் கைக்காசு முழுவதையும் தமிழ் நூல்களை பதிப்பிக்க செலவு செய்தவர். 

1876 ஆம் ஆண்டு பிறந்த பேரறிஞர் பவானந்தம் பிள்ளை  1932 மே மாதம் 20 ஆம் நாள் மறைந்தார்.

மே 20, 1957 

ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி .பிரகாசம் இன்று காலமானார். பிரிட்டிஷாரின் துப்பாக்கிக்கு தன்  மார்பைத் திறந்து காட்டி சுடும்படி கர்ஜித்த விடுதலை இயக்க வீரர் இவர்.  பல ஆண்டுகள் சிறையில் இருந்த தியாகியும் கூட.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...