Skip to main content

ஏப்ரல் 8

 ஏப்ரல் 8, 1857 

மாட்டுக் கொழுப்பு தடவிய குண்டுகளைப் பயன்படுத்த மறுத்ததற்காக இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டனர். 

இதைக் கண்டு பொறுக்காத மங்கள் பாண்டே என்னும் இந்திய வீரன், மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக். கொன்றுவிட்டான். 

கர்னல் வீலர் தலைமையில் சென்ற பிரிட்டிஷ் படை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பாண்டேயைக் கைதுசெய்தது. 

இருபத்தாறு வயதான மங்கள் பாண்டே இன்று பாரக்பூரில் ஒரு  மரக் கிளையில் தூக்கிலிடப்பட்டான். 


மங்கள் பாண்டே குறித்த மேலும் சில செய்திகள்:

1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.

1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். 

இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, தான் சிப்பாய் கலகத்தைத் தொடங்கி வைத்தவர்.

இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைபிரிவு கலைக்கப்பட்டது.

மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. 

Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. 

இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 8, 1894 

வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திரசட்டர்ஜி இன்று காலமானார். 

ஏப்ரல் 8, 1926 

சந்தச் சரபக் கவி உடுமலை முத்துச்சாமிக்  கவிராயர் இன்று காலமானார். 

ஏப்ரல் 8, 1964

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் மறைந்த நாள். 

ஏப்ரல் 8, 1977 

எழுநூறு கோடி சதுர மைல் பரப்புள்ள சூரியப் புள்ளி இன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

ஏப்ரல் 8, 1989 

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான  ஏ. எம். ராஜா  மறைந்த நாள். 

1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். 

இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி. 

வாராயோ வெண்ணிலாவே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே...

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...

ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்....

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 

யாவருக்கும் பொது செல்வமன்றோ 

ஏனோ ராதா இந்த பொறாமை 

யார்தான் அழகால் மயங்காதவரோ ...

மாசிலா உண்மைக் காதலே…

மாறுமோ செல்வம் வந்த போதிலே…

காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே...

போன்ற இவர் பாடிய பல பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. 

 ஏப்ரல் 8,  2013 

இங்கிலாந்தின்  முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர்  என்ற பெருமை கொண்ட மார்கரெட்  தாட்சர் மறைந்த நாள். 

ஏப்ரல் 8,  2015

தமிழ் எழுத்தாளர்களில்  குறிப்பிடத்தக்கவரான ஜெயகாந்தன் மறைந்த நாள்.  

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவர் 

ஏப்ரல் 8,  2025

இலக்கியவாதியும் அரசியல்வாதியுமான  குமரி அனந்தன் மறைந்த நாள்.  நாடாளுமன்றத்தில் முதன்முதலில் தமிழில் பேசிய பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...