Skip to main content

ஏப்ரல் 19

 ஏப்ரல் 19,1824

பைத்தியம் கொடியவன் ஆபத்தானவன் என்றெல்லாம் தன் காதலியாலேயே வருணிக்கப்பட்டவரும் தன் வாழ்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற முதல் ஆங்கில கவிஞருமான லார்ட் பைரன் கிரீஸ் நாட்டில் ஒரு வகைக் காய்ச்சலினால் காலமானார்.

ஏப்ரல் 19, 1882 

பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின் இன்று காலமானார்.

ஏப்ரல் 19, 1906

மேரி கியூரியின் கணவர் பியாரி கியூரி மரணமடைந்தார்.

அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது பாரிஸ் தெருவில் பியாரி கியூரி மீது ஒரு குதிரை வண்டி மோதி கீழே தள்ளியது. அப்போது எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த பாரவண்டி அவர் மீது ஏறியதால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.  1904 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

ஏப்ரல் 19, 1944

W.O.ஹியூம், தாதாபாய் நவரோஜியுடனிருந்து காங்கிரஸ் மகாசபையை ஆரம்பித்தவரும் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த நாகபுரி காங்கிரசுக்கு தலைமை வகித்தவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இன்று காலமானார்.

ஏப்ரல் 19, 1951

உலக அழகி போட்டி முதன் முதலில் ஸ்ட்ராண்ட் என்னுமிடத்தில் நடைபெற்றது. முதல் உலக அழகியாக ஸ்வீடனைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் 21 வயது மகள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.  பெயர் மிஸ் கீகி ஹாக்கோன்சன். போட்டியில் 30 அழகிகள் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 19, 1975

விண்வெளி யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்த நாள் இன்று. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா இன்று செலுத்தப்பட்டது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...