Skip to main content

ஏப்ரல் 6

  ஏப்ரல் 6, 1815

உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரான ‘மகாவித்வான்’  மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த நாள். 

ஏப்ரல் 6, 1909 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களைத்  தோற்றுவித்த வள்ளல்  அழகப்பச் செட்டியார் பிறந்த நாள்.

ஏப்ரல் 6, 1950 

இதற்குக் கொடுக்கப்படும் விலையைக் கொண்டு உலக மக்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் வயிறார உணவு கொடுக்க முடியும் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட உலகப் புகழ் பெற்ற கோஹினூர்  வைரம் இன்று இங்கிலாந்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டது. 


ஏப்ரல் 6, 1909 

ராபர்ட் எட்வின் பியரி இன்று வடதுருவத்தை முதன் முதலில் சென்றடைந்தார். 

ஏப்ரல் 6, 1919

ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இன்று பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்.

ஏப்ரல் 6, 1930 

காந்தி தலைமையில் தண்டியில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதே நேரத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் 96 தியாகிகள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறைக்குச் சென்றனர். 

ஏப்ரல் 6, 1938

இயற்கை வேளாண் அறிவியல் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பிறந்த நாள். 

ஏப்ரல் 6, 1980 

ஜனதா கட்சியிலிருந்து பிரித்து பாரதீய ஜனதா கட்சி இன்று தனியாகத் தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 6, 1984 

ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான இருவரில், இயக்குநர் பஞ்சு  மறைந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...