Skip to main content

ஏப்ரல் 24

 24 ஏப்ரல் 1934

தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தவரான ஜெயகாந்தன்  பிறந்த நாள். 

இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 

சில நேரங்களில் சில மனிதர்கள் ,ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற இவரது படைப்புகள் புகழ் பெற்றவை.

24 ஏப்ரல் 1936 

தமிழறிஞர் ஔவை து. நடராசன் பிறந்த நாள். 

ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.  இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட.

 24 ஏப்ரல் 1937

இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரில் ஒருவரான ஜெயலட்சுமி பிறந்த தினம்.  

சூலமங்கலம் சகோதரிகள்  பாடிய கந்த சஷ்டி கவசம் உலகம் முழுதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

 ஏப்ரல் 24, 1945 

பர்மாவின் வீழ்ச்சி உறுதியானதும் ஜப்பானியரைத் தொடர்ந்து நேதாஜியும் அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவர் இந்திய தேசிய ராணுவத்திற்கு "இந்தியா சுதந்திரம் அடைவது நிச்சயம். வெகு விரைவில் அடைந்தே தீரும்" என்று உருக்கமாக செய்தி அனுப்பினார்.

ஏப்ரல் 24, 1952 

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக  ராஜேந்திரபிரசாத்தும் துணை ஜனாதிபதியாக டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏப்ரல் 24, 1952 

இந்தியாவின் முதல் பொது தேர்தல் இன்று துவங்கியது.


ஏப்ரல் 24, 2011

புட்டபர்த்தி சாய் பாபா இன்று உடல்நலக்  குறைவால் மறைந்தார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...