Skip to main content

ஏப்ரல் 12

ஏப்ரல் 12,1606

இங்கிலாந்தின் தேசிய கொடியாக யூனியன் ஜாக் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 12, 1633

சமயக் கருத்துக்கு முரண்பாடாக கோபர் நிகஸ் கொள்கையான 'சூரிய மையக் கொள்கை' அதாவது சூரியனைச் சுற்றியே எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை நிரூபித்ததற்காக சமய நீதிமன்றம் இன்று கலிலியோவை விசாரணை செய்தது.

அந்த மன்றத்தினால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றாலும் கலிலியோவிடம் பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லா கோள்களும் சுற்றி வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது.

அதன்படி தான் நிரூபித்த கொள்கையான சூரியனைச் சுற்றியே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்பது தவறு.  சமய நூல் சொல்வது போல பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று எழுதிக்கொடுத்துவிட்டு வருத்தத்துடன் வீடு திரும்பினார். 

ஏப்ரல் 12, 1945

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிராங்கிளின்  ரூஸ்வெல்ட் மறைந்த நாள். 
இப்போது ஒருவர் இரண்டு முறை மட்டுமே அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்கு விதி விலக்கான ஒரே ஜனாதிபதி இவர் தான். இரண்டு முறைக்கு மேல் இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். 1933 முதல் 1945 வரை உள்ள பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து  நான்கு முறை இவர் ஜனாதிபதியாக இருந்தார். 

ஏப்ரல் 12, 1982

மகாத்மா காந்தி பற்றிய திரைப்படத்திற்கு எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

ஏப்ரல் 12, 1992

சென்னையில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது

ஏப்ரல் 12, 1993

பிரபல கல்வியாளரும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான  சுந்தர வடிவேலு காலமானார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.






Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...