Skip to main content

ஏப்ரல் 23

 ஏப்ரல் 23,1640

சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள். பிரான்சிஸ் டே என்பவர் கிழக்கிந்திய கம்பெனி வாணிபம் செய்வதற்காக 10 சதுர கிலோமீட்டர் பரப்புடைய நிலத்தை கடற்கரையை ஒட்டி வாங்கினார்.  அவரும் கிழக்கு இந்திய கம்பெனி உரிமையாளர் ஆண்ட்ரூ ஜோகன் என்பவரும் இந்த இடத்தில் ஒரு பண்டகசாலை கட்டி முடித்தனர்.  கட்டி முடித்த நாள் செயிண்ட் ஜார்ஜ் தினம். எனவே இந்த இடத்திற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயர் சூட்டினார்கள்.

ஏப்ரல் 23, 1826 

கிறித்துவக் கம்பர் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படும் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை பிறந்த நாள். 

ஏப்ரல் 23, 1915

ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் புரூக் காலமானார்.

ஏப்ரல் 23, 1916

பாலகங்காதர திலகர் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கினார்.

ஏப்ரல் 23, 1938

தென்இந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா என்றெல்லாம் அழைக்கப்படும் பாடகி S.P. ஜானகி ஆந்திராவில் இன்று பிறந்தார்.  1957  ஆம் ஆண்டு முதல் பாடிக்கொண்டிருக்கும் இவர் இன்றும் தன்னுடைய  குரலின் இளமையைப் பராமரித்து வருவது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.  சிங்கார வேலனே தேவா என்று இவர் பாடிய பாடல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தையது என்பது வியப்பைத் தரும். பல மொழிகளில்  நன்கு பேசவும் உரையாடவும் திறன் பெற்ற இவர் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.  

ஏப்ரல் 23, 1992 

பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை உருவாக்கிய இந்தியாவின் சிறந்த திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான  சத்யஜித் ரே கல்கத்தாவில் காலமானார்.

ஏப்ரல் 23, 2007

சோவியத் யூனியன் என்ற ஒருங்கிணைந்த நாட்டிலிருந்து  பிரிந்த பிறகு ரஷ்யாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர் போரிஸ்  யெல்ட்சின். inru அவர் மறைந்த நாள். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...