Skip to main content

ஏப்ரல் 25

 ஏப்ரல் 25, 1792

கில்லட்டின் என்னும் தலை வெட்டும் இயந்திரம் மூலமாக முதல் மரண தண்டனை இன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டது. முதலில் இந்த இயந்திரத்தின் பெயர் லூயிசன் என்றுதான் இருந்தது. டாக்டர் லூயிஸ் என்பவர் இதை வடிவமைத்ததால் இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது.  வலி தெரியாமல் துரிதமாக மரணம் ஏற்படுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி டாக்டர் கில்லெட்டின் வற்புறுத்தி வந்தார். பின்னர் அவர் பெயரிலேயே இது பிரபலமடைந்தது. பிரெஞ்ச் புயல் புரட்சியின் போது தான் கில்லட்டின் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து பொதுவாக நிலவிய போதும்  இது அதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனியில் 13-ம் நூற்றாண்டு முதல் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அப்போது இதன் பெயர் டைல்.  இத்தாலியில் இதன் பெயர் மானையா  ஸ்காட்லாந்தில் 1581 ஆம் ஆண்டு ரீசன்ட் மார்ட்டனின் தலை இதன் மூலமாகவே கொய்யப்பட்டது.

ஏப்ரல் 25, 1897 

தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்னும் பாடலின் ஆசிரியர் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இன்று காலமானார்.

ஏப்ரல் 25 

புராணக் கதைகளுக்கு புது வடிவம் தந்து, புதிய விளக்கம் தந்த  புதுமைப்பித்தன் இன்று தான் பிறந்தார். அவரது இயற்பெயர் விருத்தாச்சலம்.  

ஏப்ரல் 25, 1912

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் பிறந்த நாள் இன்று.


புகழுக்கு ஆசைப்படாத அடக்கம், இலக்கியத்திலும் மொழியிலும் ஆழமான அறிவு, போலி ஆடம்பரத்தை ஒதுக்கிய மாமனிதர்,  தன்னுடைய  எழுத்தில் நல்ல சிந்தனைகளை மட்டுமே வழங்கிய பண்பாளர் மு.வ.

ஏப்ரல் 25, 1947 

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சினிமா நடிகர்களான எம் கே தியாகராஜ பாகவதரையும் என் எஸ் கிருஷ்ணனையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. 

இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், 13 நாள்கள் சிறையிலிருந்த இருவரும் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு விடுதலையானார்கள்.

ஏப்ரல் 25, 1961 

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை இன்று காலமானார். 

சொல்லாராய்ச்சியில் வல்லவரான இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர். இவர் எழுதிய தமிழின்பம் என்னும் நூல் சாகித்த அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் நூலாகும்.

ஏப்ரல் 25, 1989

தமிழ் இமயம் என்று அழைக்கப்பட்ட  டாக்டர் வ. சுப. மாணிக்கம் மறைந்த நாள்.

ஏப்ரல் 25, 2018

சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் போன கணவர் வீடு திரும்பலே ...

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே... 

போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இனிமையும் அதற்குள் கலந்து வரும் குழந்தைத்தனமும் நம் மனதுக்குள் நிறையும். 

அந்தப் பாடல்களையெல்லாம் பாடிய  பாடகி எம். எஸ். இராஜேஸ்வரி மறைந்த நாள். 

ஏப்ரல் 25, 2025

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...