Skip to main content

ஏப்ரல் 14

 ஏப்ரல் 14, 1865

ஆபிரகாம் லிங்கன் இன்று சுடப்பட்டார்.  

வாஷிங்டனில் ஒரு நாடக அரங்கில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜான் பூத் என்பவனால் சுடப்பட்டார்.

ஏப்ரல் 14, 1890

இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் இன்று தான் பிறந்தார்.

ஏப்ரல் 14, 1896

கன்னிமாரா நூலகத்தின் திறப்பு விழா நடந்தது. 

அன்றைய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பொதுமக்களுக்கு படிப்பார்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூலகத்திற்கு 1890 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.  இதனால் இந்த நூலகத்திற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது.

ஏப்ரல் 14, 1907 

நாடக நடிகராக  இருந்து பின் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகப் புகழ் பெற்றவரான எம். ஆர். ராதா பிறந்த நாள்

ஏப்ரல் 14, 1912

டைட்டானிக் இன்று மூழ்க ஆரம்பித்தது 

உலகிலேயே மிகப்பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் இங்கிலாந்தில் சவுத் ஆம்டனிலிருந்து நியூயார்க்குக்கு இன்று  தன் முதல் பயணத்தைத் துவக்கியது. நள்ளிரவுக்கு சற்று முன்னர் பனிப்பாறையில் மோதியதால் மூழ்க ஆரம்பித்தது . இதில் சென்ற 2004 பேரில் 1403 பேர் பலியானார்கள். கடலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்கள் மறுநாள் காலை 8 மணி அளவில் ஒரு கப்பலால் மீட்டுக் காப்பாற்றப்பட்டார்கள். கப்பல் போக்குவரத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து இது.

ஏப்ரல் 14,1922 

சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்திற்கு இரவீந்திரநாத் தாகூர் அடிக்கல் நாட்டினார்.

ஏப்ரல் 14,1927

தமிழ்த் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகி என்று கருதப்படும் பி. ஏ. பெரியநாயகி பிறந்த நாள். இவர் ஒரு நடிகையும் கூட. 

ஏப்ரல் 14,1950 

ரமண மகரிஷி இரவு 8.47 க்கு தனது ஆசிரமத்தில் மகாசமாதி அடைந்தார்.

ஏப்ரல் 14,1950 

வசந்த் அண்ட் கோ நிறுவங்களின் நிறுவனர்  எச். வசந்தகுமார்  பிறந்த நாள். 

விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்து, சொந்தமாக ஒரு மளிகைக் கடை தொடங்கி மெல்ல மெல்ல ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை அமைத்தவர் இவர். வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனரும் இவர் தான்.  நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள தொழிலதிபர் இவர். 

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மறைந்த பல முக்கிய பிரமுகர்களும் இவரும் ஒருவர்.  2020 ஆகஸ்ட்  28,  அன்று மறைந்தார். 

கடந்த  9 ஏப்ரல் 2025 அன்று மறைந்த குமரி அனந்தன் இவருடைய சொந்த அண்ணன். 

ஏப்ரல் 14,1951 

சென்னை தலைமை இடமாகக் கொண்டு தக்ஷிண ரயில்வே அதாவது தென்னக ரயில்வே அமைக்கப்பட்டது

ஏப்ரல் 14,1962 

சீரிய சிந்தனைகள், செயல் திட்டங்கள் மூலமாக பெரும் புகழ் பெற்ற பொறியியல் அறிஞர் எம் எஸ் விஸ்வரய்யா இன்று காலமானார். புகழ் மணக்க வாழ்ந்த அவர் இறக்கும்போது வயது நூற்று ஒன்று.

ஏப்ரல் 14,1972 

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் காலமானார்.

ஏப்ரல் 14,1990 

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...