Skip to main content

ஏப்ரல் 17

ஏப்ரல் 17, 1756 - 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்.  

ஏப்ரல் 17, 1785 

பன்மொழி அறிஞரும்  பெரும் புலவருமான சிவஞான முனிவர் காலமானார். 

இவர் கம்பர் அந்தாதி, சோமேஸ்வரர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக் கோவை போன்ற நூல்களை எழுதியவர்.

ஏப்ரல் 17, 1790

புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும் அரசியல்வாதியுமான பெஞ்சமின் பிராங்கிளின் இன்று காலமானார்.

ஏப்ரல் 17, 1912

மலையாள மொழி எழுத்தாளரான தகழி சிவசங்கரப் பிள்ளை பிறந்த நாள். 

இவரது படைப்பான செம்மீன் ஒரு புகழ் பெற்ற  நூல். 

ஏப்ரல் 17, 1917

தமிழில் பிறமொழிக் கலப்பு எப்படி அவசியம் இல்லையோ அப்படியே எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றங்களைச் செய்யக்கூடாது என உறுதியாக இருந்த வ.சுப.மாணிக்கனார் புதுக்கோட்டை மேலைச் சிவபுரியில் இன்று பிறந்தார்.

ஏப்ரல் 17, 1975

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஜனாதிபதியாகவும் பணியாற்றிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இன்று காலமானார்.



17 ஏப்ரல் 1992

உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் மறைந்த நாள். 

ஏப்ரல் 17, 2013

திரையிசை உலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயர் தவிர்க்க 
முடியாதது. எம்.எஸ்.விஸ்வநாதன் - டி. கே. இராமமூர்த்தி என்ற இரட்டை இசைஅமைப்பாளர்களுள் ஒருவரான  டி. கே. இராமமூர்த்தி மறைந்த நாள் இன்று. 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...