செப்டம்பர் 1, 1604 சீக்கியர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஆதி கிரந்த் இன்று தான் பொற்கோவிலில் வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 1799: திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய படைத்தளபதி மேஜர் பானர் மேன் செப்டம்பர் 4ஆம் தேதி தன்னை பாளையங்கோட்டையில் வந்து சந்திக்கும்படி கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பிய நாள். செப்டம்பர் 1 1859: சிகாகோ ரயில் பாதையில் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் முதன் முதலில் கழிப்பறை வசதி செய்யப்பட்டது. செப்டம்பர் 1 1877: தமிழறிஞர் அ. வரதநஞ்சைய பிள்ளை பிறந்த தினம். செப்டம்பர் 1 1895: கர்நாடக இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம். செப்டம்பர் 1 1896:: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உலகம் முழுதும் தோற்றுவித்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா பிறந்த தினம். செப்டம்பர் 1 1928: முதல் கார்ட்டூன் பேசும் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது. ஈசாப்பின் டின்னர் டைம் என்னும் நீதி கதை இது. செப்டம்பர் 1 1939: கடுமையான ஊனமான மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மனி மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரும் திட்டத்திற்கு ஹிட்லர் இன்று ஒப்புத...