Skip to main content

Posts

Showing posts from March, 2025

ஏப்ரல் 3

  ஏப்ரல் 3, 1773 ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் இன்று. இவருடைய தந்தை ஒரு விவசாயி தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த முதல் பிள்ளை இவர்.  ஆரம்ப காலத்தில் உழவுத் தொழில்தான் செய்து வந்தார். 11 வயதில் தந்தையை இழந்த பின்பு தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் வளர்ந்தார். அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அமெரிக்க விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் படைக்கு தலைமை தாங்கி போரிட்டு தன்னாட்டிற்கு வெற்றியும் தேடித் தந்தார். விடுதலை பெற்ற நாட்டிற்கு முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் அவர். சிறிய வயதிலேயே அவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினார். அவரது ஆசைப்படியே அவர் முயற்சி செய்தார். ஜனாதிபதியாகவும் ஆனார். போட்டியின்றி இரண்டு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வர்ஜீனியாவில் இன்று தான் பிறந்தார். ஏப்ரல் 3, 1981 ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை மறைந்த தினம். ஒளவையார் குப்பம் என்ற தன் ஊர்ப்பெயரை தன் பேரோடு சேர்த்துவைத்துக்கொண்டதால்   ஒளவை.சு.துரைசாமிப் பிள்ளை  என்றே எல்லோராலும் அறியப்பட்டவர...

ஏப்ரல் 2

  ஏப்ரல் 2, 1872  தந்தி முறையைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி  சாம்யுல் மோர்ஸ் நியூயார்க்கில் காலமானார். இவரது பெயரை ஒட்டியே அது மோர்ஸ் கோடு என வழங்கப்படுகிறது. ஏப்ரல் 2, 1881 நாட்டு விடுதலைக்குப் போராடி சிறை சென்றவரும் சிறந்த  இலக்கியவாதியுமான வ.வே.சு ஐயர் இன்று பிறந்தார். வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியஐயர் என்பது அவரது முழுப் பெயர்.  திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881ஆம் ஆண்டு ஏப்ரல்  2-ஆம் தேதி பிறந்தார். 1897ல் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1907ல் பாரிஸ்டர் படிக்க இங்கிலாந்து சென்றார். 1910ல் இங்கிலாந்திலிருந்து   கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார்.  புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன்  நெருங்கிய நட்பு  ஏற்பட்டது.  புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குறுந்தொகையை ஆங்கிலத்தில் எழுதினார். 'இது தான் சிறுகதை வடிவம், இப்படித்தான் சிறுகதை அம...

ஏப்ரல் 1

  ஏப்ரல் 1, 1578 மனிதர் உடலில் ரத்தம் வட்டப்பாதையில் சுற்றுகிறது என்றும் மனித இதயம் நிமிடத்திற்கு சுமார் 72 முறை துடிக்கிறது என்றும் கண்டுபிடித்த வில்லியம் ஹார்வி பிறந்தநாள் இன்று. ஏப்ரல் 1, 1872  செல்கருவைச் சுற்றியுள்ள கூழ்மப் பொருளுக்கு  புரோட்டோ பிளாசம்  என்று பெயர் சூட்டிய ஜெர்மனி தாவரவியல் விஞ்ஞானி கியூகோ வான் இன்று காலமானார். செல் பிரிதல் மூலமாகவே புதிய செல்கள் தோன்றுகின்றன என்று கூறியவரும் இவரே. ஏப்ரல் 1, 1889 HINDU என்னும் ஆங்கில ப்  பத்திரிக்கை நாளிதழாக இன்று வெளிவரத் தொடங்கியது. ஏப்ரல் 1, 1904 ஹென்றி ராய்ஸ் என்பவர் இரண்டு சிலிண்டர் காரை தயாரித்து மான்செஸ்டரில் வெள்ளோட்டம் விட்டார். இந்த க்  காரை விற்பனை செய்வதற்கான உரிமையை சார்லஸ் ஸ்டூவர்ட் ரோல்ஸ்  என்பவர் எடுத்தார். இந்த க்  கார்   ரோல்ஸ் ராய்ஸ்   என்று பெயரில் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் 1, 1931  சென்னையில் பீச் ஸ்டேஷன் தாம்பரம் மின்சார ரயில் வண்டி வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. ஏப்ரல் 1, 1933  இந்திய விமானப்படை ஆறு அதிகாரிகளுடனும் ஒன்பது வீரர்களுடன...

மார்ச் 30

  மார்ச் 30, 1692 வேளாண்துறையில் கால்நடை வளர்ப்பும் வாணிபமும்  என்ற பெயரில் முதல் பத்திரிக்கை  வெளிவந்தது. மார்ச் 30, 1709 தான் எழுதிய தொடர்ச்சியான நாட்குறிப்பு மூலம் ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை  பிறந்த  தினம்.  பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெ னியின்  அலுவலராக வும்    துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 ஜனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாமல் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.  உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி என்று சாமுவேல் பெப்பீசு என்பவரைச் சொல்கிறார்கள். பெப்பீசு எழுதிய காலத்தை விட அதிகமான காலம் எழுதியதோடு அதை ஒரு வரலாற்று ஆவணம் போல வழங்கியதில் சாமுவேல் பெப்பீசு எழுதியதை விட இவரது நாட்குறிப்பு சிறப்பானது.   இந்தியாவின் பெப்பீசு என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி.  இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் ப...

மார்ச் 29

  மார்ச் 29,1728 எடின்பர்க்கில் முதன்முதலாக இசைக் கழகம் எடின்பர்க்  இசைக்கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.   மார்ச் 29, 1857 பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த காரணத்திற்காக ஒரு படைப் பிரிவில் உள்ள அத்தனை இந்திய வீரர்களும் தண்டிக்கப்பட்டனர். இதனால் மத உணர்ச்சி தூண்டப்பட்ட ஒரு வீரன் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டு பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை போரில் கொன்று விட்டான்.  இதன் எதிரொலியாக மீரட் நகரில் உள்ள பல இந்திய வீரர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கலகக்காரர்கள் என்று குற்றம் சாட்டினர்.  சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர் துவங்கத் தூண்டுகோலாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.   மார்ச் 29, 1886 அட்லாண்டாவைச் சார்ந்த ஜான் பெம்பர்டன்  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கோ கோலா மூளை அபிவிருத்தி டானிக் என்றும் மேதைகளின் பானம் என்றும் தவறான  விளம்பரத்துடன் விற்பனை துவங்கப்பட்டது.   மார்ச் 29, 1982 ஆந்திராவில் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவக்கினார்.   மார்ச் 29, 2007 புகழ் பெற்ற ...

மார்ச் 27

  மார்ச் 27, 1899 வானொலி ஒலிபரப்பு மார்க்கோனியால் முதன்முதலாக உலக  அளவில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இங்கிலீஷ் கால்வாய்க்கு மறுகரையில் சுமார் 52 கிலோமீட்டர் தூரம் வரை மோர்ஸ் சிக்னல் ஒலிபரப்பப்பட்டது. மார்ச் 27, 1892 உரைநடைக் கவிதை எழுதி உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெருங்கவிஞர் வால்ட் விட்மன் இன்று காலமானார். புல்லின் இதழ்கள்  ( Leaves of Grass)   என்னும் இவரது கவிதை அமெரிக்கக் கவிதை உலகில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியது. இந்தியா செல்லும் வழி ( Passage to India)   இவரது புகழை உயர்த்தியது. மார்ச் 27, 1892 சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள்.   மார்ச் 27, 1968 விண்வெளியில் பறந்த முதல் ரஷ்ய விண்வெளி வீரர் கர்னல் யூரி கஹாரினும் மற்றொரு விண்வெளி வீரர் கர்னல் விளடிமிர் செரியோஜினும் விமான விபத்தில் மாண்டனர். ககாரின்  விண்ணில் பயணித்த நாளான 1961 ஏப்ரல் 12 அன்று சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் இருந்தார். இந்த  நாள்  மனித சமுதாயம் பூமிக்கு வெளியே தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடங்கிய நாள்.   2001 ஆம் ஆண்டு முதல்,  ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ம்...

11 Public March 2025 ECONOMICS

 11 Public March 2025 ECONOMICS

மார்ச் 28

மார்ச் 28, 1904 பழம்பெரும் நடிகர்  வி. நாகையா  பிறந்த நாள்.    ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இவர் தமிழ் திரைப்பட நடிகராக புகழ்பெற்றவர். அந்தக்கால நடிகர்கள் பொதுவாக பாடகர்களாகவும் இருந்திருப்பார்கள். இவர் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் விளங்கியவர். மார்ச் 28, 1932 புகழ்பெற்ற கல்வியாளரும் பொருளியல் ஆசிரியரும் வரலாற்று ஆசிரியருமான கே.வி.ரங்கசாமி ஐயங்கார் காலமானார்.   மார்ச் 28, 1941 புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியையும் திறனாய்வாளருமான வர்ஜின் வோல்பின் உடல் ஊசி நதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.   மார்ச் 28, 1943 பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் வழிகாட்டியும் சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தி காலமானார். மார்ச் 28, 1944 ந. மு. வேங்கடசாமி நாட்டார் மறைந்த நாள்.    மார்ச் 28, 1971 பாரதியின் தம்பியாக பாவிக்கப் பெற்றவரும் பாரதியாரின் பெருமையை முதலில் வெளிப்படுத்தியவருமான பரலி சு.நெல்லையப்பர் காலமானார்.

மார்ச் 24

 மார்ச் 24 1766  இந்தியாவில் அஞ்சல் முறை ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 24 1882  காச நோயை உண்டாக்கும் மைக்கோ பாக்டீரியம் என்னும் கிருமியை ராபர்ட் கோச் எனும் ஜெர்மனி விஞ்ஞானி  இன்று  கண்டுபிடித்தார். மார்ச் 24 1905 தமிழ் இலக்கிய உலகில் மணிக்கொடி என்ற பெயரைப் பதிய வைத்த பி எஸ் ராமையா இன்று வத்தலக்குண்டு ஊரில் பிறந்தார். எழுத்துலகில் புரட்சியையும் புதுமையையும் உருவாக்கிய பத்திரிக்கை மணிக்கொடி. இதை ஆரம்பித்தவர் கே சீனிவாசன். இவர் விடுதலைப் போராட்ட வீரர். இவர் தொடங்கிய இந்தப் பத்திரிக்கையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் பணியாற்றினார்கள். அந்தப் பட்டியலில் மூத்த எழுத்தாளர் பிஎஸ் ராமையாவும் ஒருவர்.  இப் பத்திரிகையின் தொடக்க கால ஆசிரியராக இருந்த வ.ரா இலங்கை வீரகேசரி பத்திரிக்கைப் பணிக்குச் சென்றதும் ராமையா மணிக் கொடியின் ஆசிரியர் ஆனார். புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்திரிக்கையை நடத்தினார். அந்தக் காலத்தில் தரமான சிறுகதைகளை இலக்கிய நயத்தோடு வெளியிட்ட பத்திரிக்கை எது என்று கேட்டால் மணிக்கொடி என்று தயங்காமல் சொல்வார்கள். ஐந்தாவது வரையே படித்தவ...

மார்ச் 26

  மார்ச் 26, 1827 உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் பீதோவன் இன்று காலமானார். இவர் ஜெர்மனியில் பிறந்து ஆஸ்திரியாவில் குடியேறியவர்.  இவரது முழுப் பெயர் லுட்விக் வான் பீதோவன். மார்ச் 26, 1868 சிறியதாக  ஒரு பூட்டுத் தயாரிக்கும்  தொழில் தொடங்கி, பிறகு தன்  சகோதரருடன் சேர்ந்து Godrej  ( கோட்ரேஜ்) நிறுவனத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த  அர்தேஷிர் கோட்ரேஜ் இன்று தான் பிறந்தார்.  மார்ச் 26,1907 திரு.வி.கவின் ஆசிரியர் நா.கதிரைவேற்பிள்ளை மறைந்த தினம். எத்தனை முறை பழனி மலைக் கோவிலுக்குப் போயிருக்கிறோம்.  திருக்கோவிலில் உள்ள சித்திரங்களைக்  கவனித்திருக்கிறீர்களா?  அந்தச் சித்திரங்கள் அனைத்தும் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் அமைந்தவை. அந்த ' சுப்பிரமணிய பராக்கிரமம்' நூலை எழுதியவர் கதிரைவேற்பிள்ளை. அவர் வாழ்ந்தது வெறும் 33 ஆண்டுகள் மட்டுமே. 1874-லில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் 1907-லில் குன்னூரில் மறைந்தார். பிறந்தது இலங்கை யாழ்ப்பாணம் என்றாலும் அவர் வாழ்க்கையின் பயனை அனுபவித்தது தமிழகம் தான். சென்னையில் அவர் ஆசிரியராக இறந...