Skip to main content

25 டிசம்பர்

 25 டிசம்பர் 1741 

ஸ்வீடனில் உப்ப சாலா என்னும் இடத்தில் ஆண்டர்ஸ் செல்சியஸ் என்பவர் சென்டி கிரேட் வெப்பமானியை தயாரித்தார்.

 25 டிசம்பர் 1796

இராணி வேலுநாச்சியார் மறைந்த தினம்.

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர். 

 25 டிசம்பர் 1821 

மைக்கேல் பாரடேவின் முதல் மின்மோட்டார் ஆய்வு வெற்றிகரமாக நடந்தது.  

25 டிசம்பர் 1892 

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தை தொடங்கினார்.



25 டிசம்பர் 1924

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்.

25 டிசம்பர் 1931 

பா. வே. மாணிக்க நாயக்கர் மறைந்த தினம்.  
தமிழில் பல அறிவியல் நூல்களை எழுதிய தமிழறிஞர் இவர். 
தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று நிரூபித்தவர். 

 25 டிசம்பர் 1972

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவரும் தமிழக முதல்வராக இருந்தவரும் புகழ்பெற்ற எழுத்தாளரும் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவருமான ராஜாஜி  (ராஜகோபாலாச்சாரியார்) காலமானார்.

 25 டிசம்பர் 1977 

உலகப் புகழ் பெற்ற தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் சுவிட்சர்லாந்தில் காலமானார்.

 25 டிசம்பர் 1991

 USSR யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் கலைக்கப்பட்டு தனித்தனி குடியரசுகளாக பிரிந்து சிதறியது. 

சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதியான மிகைல் கொர்பசேவ் பதவி விலகினார்.


25 டிசம்பர் 1994
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான கியானி ஜெயில் சிங் மறைந்த நாள். 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...