இந்த நாட்கள் இப்படியே போய்விடாது. நமக்கான நாட்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் 'இனிய தருணங்கள் இனி வரப்போகின்றன' என்ற ஆழமான எண்ணம் தான் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
மழையே இல்லாமல் வறண்ட பூமியில் காய்ந்து சருகாகிப் போன புல்லை அற்பமாக நினைக்க முடியாது. சின்னதாக ஒரு மழை வந்தாலே போதும். வறண்ட அந்தப் புல் துளிர்க்கும். அதில் குட்டிக் குட்டியாக சில பூக்களும் தலைகாட்டும்.
காய்ந்து கிடந்த பூமியில் சருகாகக் கிடந்த புல்லைப் பார்க்கும்போதே நாளைக்கு அது பூவோடு பூரித்து நிற்கும் அழகைப் பார்க்கத் தெரிந்து கொண்டால் அது தான் வாழ்க்கை.
எல்லையில்லாத தூரத்தில் சூரிய வெளிச்சம் எட்டாத தூரத்தில் கூட சூரியன் இருக்கிறது தானே. இங்கிருந்து பார்க்கும்போது வெளிச்சம் மறைந்திருப்பதை இருட்டாக நினைத்துக்கொள்கிறோம்.
இந்த நாள் இப்படியே நீளாதா என்று சின்ன சந்தோஷத்துக்குப் பெரிதாக ஏங்குகிறோம். இனி வரும் நாட்களில் எத்தனை பெரிய சந்தோஷங்கள் ஒளிந்திருக்கின்றன என்று தெரியாததால்.
பசுமை மாறாத சிறிய இடத்தைப் பார்க்கிறோம். பசுமை ஆகப்போகும் அகண்ட நிலத்தை அறியாமலேயே...
தன் சகோதரனுக்கு எழுதிய கடிதம் போன்ற நடையில் அமைந்த ஒரு Sonnet இது.
வாழ்க்கை அழகானது. அந்த அழகு இப்போது நம் கண்களுக்குத் தெரியாத போதும்... இனி வரும் அழகை நினைத்துப் பார்க்கத் தெரியாதவர்களுக்கும் கூட அந்த அழகிய நாட்கள் வரத்தானே போகின்றன.
இது தான் இந்தப் பாட்டின் theme.
எந்த ஒரு கஷ்டமான சொல்லும் இல்லாத ஒரு எளிமையான ஆங்கிலக் கவிதை இது.
There is another sky
There is another sky,
Ever serene and fair,
And there is another sunshine,
Though it be darkness there;
Never mind faded forests, Austin,
Never mind silent fields -
Here is a little forest,
Whose leaf is ever green;
Here is a brighter garden,
Where not a frost has been;
In its unfading flowers
I hear the bright bee hum:
Prithee, my brother,
Into my garden come!
- Emily Dickinson
Comments
Post a Comment
Your feedback