Skip to main content

என் கள்வன் வருகிறான்.

செல்வ முத்துக் குமரனவன்- தமிழ்த்

தெய்வமாகிய முருகன் அவன்.

உள்ளம் கவர்ந்த கள்வனவன்-என்

உயிரில் கலந்த கந்தன் குகன்.


என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய  பாடலைக் கேட்டிருப்போம்.


உள்ளத்தைத் திருடிய கள்வன் என்று பக்தி, ஒரு உரிமையோடு காட்டப்படும்.


கடவுளையே கள்வனாகக் காண்பதெல்லாம் அதீத அன்பால் பக்தியால் வந்தது என்று சொல்லுவார்கள். 


கடவுளை மட்டுமல்ல கணவனை, காதலனையெல்லாம் கூட கள்வனாகக் காணும் பார்வை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த தமிழ் மரபு.


"யாருமில்லை தானே கள்வன்"

என்பது ஒரு குறுந்தொகைப் பாடல் அடி.


உண்மையில் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல; எல்லாப் பெண்களும் இப்படிக் கணவனையோ காதலனையோ "கள்வன்" ஆக்கிப் பார்த்து மகிழ்ந்து பாடியிருக்கிறார்கள் போல.


மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இடையே இருக்கும் மைக்கால் (Maikal) மலைகளில் வாழும் பழங்குடிகள் கூட அப்படித்தான்.


அவர்களின் ஒரு காதல் பாடல் இது.


நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றன


விண்மீன்கள் வானுக்கு வந்துவிட்டன


இலை நீண்டவை அந்த இளம்பச்சை மூங்கில்கள் 


அவையூடே என் கள்வன் வருகிறான்.


நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றன.


At midnight the dogs are barking


The stars have come into the sky


Long are the leaves of the young bamboos


And breaking through them come my thief


At midnight the dogs are barking.


(Love songs of Maikal Hills)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...