Skip to main content

இதுக்கு எதுக்கு கதவு வரை?

 அவசரமான தேவை. ஆனால் கையில் பணம் இல்லை. யாரிடமாவது பண உதவி கேட்க வேண்டி வரும் போது ஒரு மாதிரியாக அவஸ்தைப் படவேண்டி வரும். 

கேட்கவும் சங்கடம். 

கேட்காமல் இருக்கவும் முடியாத நிலை. 

காதல் வந்த பெண்களும் அப்படித் தான் அவஸ்தைப் படுவர்களாம்.

ஆசை அவசரமான செலவு போலவாம். நாணம் உதவி கேட்கப் போகும் போது வருமே அவஸ்தை அது மாதிரியாம்.

அந்தப் பெண்ணுக்கு சேர மன்னன் மேல் காதல். அவனுக்கு அது தெரியாது. சேரன் வீதி உலா வரும்போது அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை. 

சேர மன்னன் இப்போது இவள் வீட்டு வழியாகத் தான் போகப் போகிறான். 

அவனைப் பார்க்க அவசரம் அவசரமாக ஓடிப் போய் கதவைத் திறக்க கதவில் கை வைக்கிறாள்.

அப்போது பார்த்து எங்கிருந்து வந்ததோ அந்த வெட்கம். நான் போய் எப்படி அவனை நேரில் பார்ப்பது என்று தயக்கம். அந்த வெட்கத்தில் கதவை அடைத்துவிட்டு வந்துவிட்டாள்.

அவசரச் செலவுக்கு பணம்கேட்டு அடுத்தவனைப் பார்க்கப் போகும் அவஸ்தை தான் அந்தப் பெண்ணுக்கு இப்பொழுது .

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.

(முத்தொள்ளாயிரம்)


சொல்லும் பொருளும்

ஆய்- ஆராய்ந்து

மணி - மாணிக்கம்

பைம் - பச்சை நிறமான

பூண் - பூண் பதித்த 

அலங்கு - ஆடும்

தார் - மாலை

கோ - அரசன்

காணிய - காண

நாணி - வெட்கப்பட்டு

நல்கூர்ந்தார் - ஏழை

நல்குரவு - ஏழ்மை

பேரும் - நகரும்

(பேர்த்தல்- நகர்த்தல்)

 நெஞ்சு - மனம்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...