22 டிசம்பர் 1887
அன்னை சாரதாதேவி பிறந்த நாள்.
22 டிசம்பர் 1887
ராமானுஜன் பிறந்த நாள்.
கடவுள் கொடுத்தது என்னவோ மிகக்குறைந்த ஆயுளும் வறுமையும் தான். சாதிப்பதற்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்திய வாழ்க்கை அது.
அது 1887 டிசம்பர் 22.
ஈரோட்டில் ஒரு ஏழை அந்தணர் குடும்பத்தில் குழந்தை ராமானுஜன் பிறந்த நாள்.
அவருடைய தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதும் வேலை செய்து வந்தார்.
அவர் குடும்பம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கும்பகோணத்தில் தான்.
7 வயதில் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
அந்த வயதிலேயே கணக்கில் ஏதாவது சூத்திரத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.
பன்னிரண்டாம் வயதில் தானே தன்னுடைய பாடத்திட்டத்தில் இல்லாத கணிதப் புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார்.
அப்படி அவர் படித்த ஒரு புத்தகம் Loney's Plane Trigonometry.
ஆசிரியர் உதவியில்லாமலேயே Sum & Products of Infinite Sequence பற்றி வகுப்பெடுக்கும் அளவுக்கு அதைப் புரிந்து கொண்டார்.
பதினைந்தாம் வயதில் அவருக்கு இரவலாக ஒரு கணிதப் புத்தகம் கிடைத்தது.
அது, Synopsis of Elementary Results in Pure Mathematics by G.S.Carr, Cambridge University.
அந்தப் புத்தகத்தில் இருந்த பெரும்பாலான தேற்றங்களைக் கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் புரிந்து கொண்டார்.
இந்த இரண்டு நூல்களில் அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் தான் அவருடைய அபாரமான கணித அறிவுக்கு அடிப்படையாக அமைந்தன.
அது 1903ஆம் ஆண்டு. அவருக்கு அப்போது 16 வயது. கணிதப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களில் அவருடைய மனம் செல்லாததால் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நடந்த கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார்.
நான்கு வருடங்கள் கழித்து சென்னை கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் இதே நிலைதான்.
1909 இல் அவருக்கு திருமணம் நடந்தது.
வயிற்றுப் பாட்டுக்காக ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். சென்னையிலேயே ஒரு வேலை தேடினார். அவர் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்தில், அதாவது 1911இல் அவருடைய முதல் ஆய்வுக் கட்டுரை Journal of the Indian Mathematical Society புத்தகத்தில் வெளியானது.
1912இல் சென்னை துறைமுக நிறுவனத்தில் (Madras Port Trust)கிளார்க் வேலை கிடைத்தது. துறைமுக நிறுவனத்தின் பிரிட்டிஷ் என்ஜினீயர் பிரான்சிஸ் ஸ்பிரிங் ( Francis Spring), Indian Mathematical Society அமைப்பைச் சேர்ந்த ராமசாமி ஐயர் ஆகிய இருவருக்கும் ராமானுஜத்தின் கணித ஆர்வம் புரிந்தது.
ராமானுஜத்தின் கணித அறிவை சரியானபடி பயன்படுத்துவதற்காக அவர்கள் ராமானுஜத்தின் படைப்புகளை மூன்று பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பினர். இருவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவரிடமிருந்து மட்டும் பதில் வந்தது.
அவர்தான் G.H. ஹார்டி.
அது 1913 ஜனவரி 16.
ராமானுஜத்தின் கத்தை கத்தையான கணக்குத் தாள்களுடன் கூடிய கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்தது. முதலில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஏதோ கிறுக்கல்கள் என நினைத்து அந்தக் காகிதக் குவியல்களை ஹார்டி அப்படியே போட்டுவிட்டார்.
இரவு உணவுக்கு பின்பு அவரது நெருங்கிய நண்பரான மற்றொரு கணித வல்லுநர் ஜான் லிட்டில் வுட் ( John E. Littlewood) ஹார்டியைப் பார்க்க வந்தார். அப்போது கத்தை கத்தையாகக் கிடந்த கணிதத் தாள்களின் மீது அவர்களின் கவனம் சென்றது. சில மணி நேரம் கழித்து இருவரும் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் அந்தக் காகிதக் குவியல்களில் 120 கணிதத் தேற்றங்களும் சூத்திரங்களும் கிறுக்கல்களாக இருந்தன.
ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படி கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னை பல்கலைக்கழகமும் அவருக்கு நிதியுதவி கொடுக்க முன்வந்தது.
1914-ம் வருடம் மார்ச் மாதம்.
வெளிநாடு செல்ல வேண்டாம் எனக்கூறிய தாயின் எதிர்ப்பையும் சமாதானம் செய்து இங்கிலாந்துக்கு கப்பலேறினார் ராமானுஜன்.
அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் இங்கிலாந்தில் தான் இருந்தார்.
டிரினிட்டி கல்லூரியில்(Tritiny College) ஹார்டியுடன் சேர்ந்து ராமானுஜன் பல தேற்றங்களையும் சூத்திரங்களையும் உருவாக்கினார்.
Arithmetic function
Riemann Series
Elliptical integrals
Hyper geometric series
Functional equations of zeta functions
Divergent series
ஆகிய பகுதிகளில் அவர் பல புதிய தேற்றங்களை உருவாக்கினார்.
சில துறைகளில் ராமானுஜத்திற்கு சுத்தமாகவே ஈடுபாடு இல்லை.
Cauchy Theorem
Double Periodic Functions
போன்ற பகுதிகளில் ராமானுஜன் ஈடுபட வேண்டும் என ஹார்டி விரும்பினார்.
1917 ஆம் ஆண்டில் தன்னுடைய 30 வயதில் F.R.S (Fellow of Royal Society)விருதையும் Fellow of Trinity College விருதையும் ஒரே நேரத்தில் பெற்றார்.
கணித ஆராய்ச்சியில் அவருடைய புகழ் உச்ச நிலையில் இருக்கும் போது அவருடைய உடல் ஆரோக்கியம் சீர் குலைத்தது. தமிழ்நாட்டில் வெப்பச் சூழ்நிலையில் வளர்ந்த அவருக்கு இங்கிலாந்தின் சூழல் உடல்நிலையைப் பாதித்தது.
அசைவ உணவுகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாட்டோடு காய்கறி உணவை மட்டும் உண்டு வந்த அவர் காசநோய்க்கு (Tuberculosis) ஆட்பட்டார்.அ ப்போது இங்கிலாந்திலும் எந்த மருந்தும் கிடையாது.
போதாக்குறைக்கு அப்போது முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் எல்லா இடத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
1919 முதல் உலகப்போர் முடிந்து உலகம் அமைதி நிலைக்குத் திரும்பியது. ஆனால் அவருடைய உடல் நலம் மிக பாதிக்கப்பட்டதால் இனி இங்கிலாந்தில் வாழ முடியாது என்ற நிலை.
இந்தியா திரும்பினார்.
அந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் நிரூபணம் இல்லாத தேற்றங்களைக் குறித்து வைத்துக் கொண்டிருந்தார்.
1920 ஏப்ரல் 26. தன்னுடைய 32வது வயதில் அவர் உயிர் இந்த மண்ணுலகை விட்டுப் புறப்பட்டது.
தன்னுடைய கடைசிக் காலத்தில் இருந்த நிலையில் குறித்து வைத்திருந்த தேற்றங்களை இன்றும் உலக அளவில் கணித வல்லுனர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக (University of Illinois) கணித மேதை Bruce C. Berndt ராமானுஜத்தின் படைப்புகளை நிரூபணங்களோடு தொகுக்கும் பணியைச் செய்து வருகிறார்.
22 டிசம்பர் 1895
எக்ஸ்ரே கண்டுபிடித்த ஜெர்மனி விஞ்ஞானி வில்ஹெல்ம் ரோண்ட்ஜென் முதன்முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே எடுத்தார்.
22 டிசம்பர்1921
ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனில் விஸ்வ பாரதியை முறையாக திறந்து வைத்தார் உண்மையில் இது 1918 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு விட்டது.
22 டிசம்பர்1929
தமிழறிஞர் 'சிலம்பொலி' சு. செல்லப்பன் பிறந்த நாள்.
22 டிசம்பர்1954
பண்டித மணி நவநீதகிருஷ்ண பாரதி காலமானார்.


Comments
Post a Comment
Your feedback