Skip to main content

பாசமா? வீரமா?

வீரம், புகழ் என்பதெல்லாம் இந்தச் சமூகம் சொல்லிக்கொடுத்தவை. 

இறந்தாலும் புகழோடு இறந்திருக்கிறான் என்றால் அந்த இறப்பிலும் தமிழ்ப் பெண்கள் மகிழ்ந்தார்கள் என்பது அப்படிச் சொல்லித்தரப்பட்ட ஒன்று.

ஆனால் ஒரு தாய்க்குத் தான் தெரியும் தன் குழந்தையின் பிரிவு எவ்வளவு வலி தரும் என்று.


தாய்மை உணர்வுக்கும் சமூகம் சொல்லித் தந்த நெறிகளுக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு தாயின் வலி இந்தப் பாடலில்...


அந்தத் தாய் கொஞ்சம் வயது முதிர்ந்தவள். 


மீன் பிடிக்க வரும் கொக்கு மாதிரி அவள் தலை முடி வெளுத்திருக்கிறது. 


அவள் மகன் போர்க்களத்தில் ஒரு எதிரி யானையைக் கொன்றுவிட்டு வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி வருகிறது.


அவளுக்கு சமூகம் சொல்லித் தந்த படி அவனைப் பெற்றபோது மகிழ்ந்ததை விட மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.


ஒரு வினாடி தான்...

அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர்.


மழை பெய்யும்போது மூங்கில் இலைகளின் நுனியிலிருந்து சொட்டுச் சொட்டாக விழும்   நீர்த்துளிகள் போலக் கண்ணீர்த் துளிகள்...


ஓ.. என வாய்விட்டுக் கூட அழ முடியாதபடி தன் மகனின் மரணத்தில் ஒரு தாய் மகிழ வேண்டும் என்பது அந்தத் தாய்க்கு எவ்வளவு கொடுமையானது. 


அதை நுட்பமாக எடுத்துக் காட்டுகிறது இந்தப் பாடல்.   


மீன் உண் கொக்கின் தூவி அன்ன

வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்

நோன் கழை துயல்வரும் வெதிரத்து 

வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

(புறநானூறு)


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...