எங்கும் பூத்துக் குலுங்குகின்றன முல்லை மலர்கள்.
ஆடுகளுக்கு தளை பறிக்க, சல்லைக் கோல் வைத்திருக்கும் அவன் இடையன். கறந்த பாலைக் கொடுத்து விட்டு கூழை வாங்கிக்கொண்டு போகும் அவன் கழுத்தில்கூட முல்லை மொட்டுகள்.
எனக்கும் முல்லை மலர் சூட ஆசை தான்.
பொருள் தேடிப் போன என்னவன் இன்னும் வீடு திரும்பாத போது நான் எப்படிப் பூச்சூட?
அவரோ வாரார் முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback