Skip to main content

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

 

      ராமனுக்குத் திருமணம். திருமண விழாவிற்காக தசரதன் தன் பரிவாரங்களோடு மிதிலையை நோக்கிப் பயணம் செய்கிறான். வழியிலே ஒரு சோலையிலே தங்குகிறார்கள். சோலையிலே ஒரு பெண்ணும் அவளுடைய உள்ளம் கவர்ந்தவனும்  இருக்கிறார்கள்.

       அவள் யாழ் போல இனிமையான குரலில் ஏதோ சொல்கிறாள். அவன் ஒரு நாட்டின் மன்னன். 

   அன்றைய தினம் அவர்களுக்குள் ஏதோ ஊடல். அவனைக் கண்டும் காணாமல் நகர்ந்து போகிறாள். அவனோ அவளிடம் கெஞ்சுகிறான். ஆனால் அவள் மனமிரங்கவில்லை. அவனைத் தாண்டிச் செல்கிறாள்.

   கொஞ்ச நேரம் போனபின் அவள் கோபம் போய்விடுகிறது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறாள். அவன் அவ்வளவு கெஞ்சியபோதும் ஏற்றுக்கொள்ளாமல் வந்துவிட்டு இப்பொழுது வலியப்போனால் அவன் சிரிப்பானே என்ற தயக்கம் அவளுக்கு.

   அதற்கும் அவளுக்கு குறும்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. தன் கையில் இருந்த கிளியை அவன் இருக்கும் இடத்திற்கு ஏவி விடுகிறாள். பின் கிளியைத் துரத்துபவள் போல அவனை நோக்கி ஓடுகிறாள்.

 பாடல்:

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்

தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்

சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்.

கம்பராமாயணம் (பாலகாண்டம்  பூக்கொய் படலம்)

பொருள்:

யாழ் ஒக்கும் சொல் – யாழ் போல இனிமையான குரலில்

பொன் அனையாள் – திருமகளைப் போன்ற பெண்
ஓர் இகல் மன்னன் – ஒப்பற்ற வலிமை வாய்ந்த அரசன்
தாழ வணங்கி நிற்க
தாழாள் – சிறிதும் மனம் மனமிரங்காதவளாயிருந்து
தாழ்ந்த மனத்தாள் –பின்புமனம் இளகி
தளர்கின்றா –வருந்தி
ஆழத்து உள்ளும் – ஆழ்ந்து எண்ணி

கள்ளம் நினைப்பாள்குறும்பாக ஒரு யோசனை கொண்டவளாய்
அவன் நிற்கும் சூழற்கே – அவன் நிற்கின்ற பகுதிக்கே
தன் கிள்ளையை– தான் வளர்த்த செல்லக் கிளியை

ஏவித் தொடர்வாளும் முன்னால் ஏவிப்பின்னால் அதனைத் தொடர்ந்து செல்வாள்.


ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
                                                     - நா.முத்துக்குமார் 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...