Skip to main content

Posts

Showing posts from May, 2025

ஜூன் 1

  ஜூன் 1 1884  உலகப் புகழ் பெற்ற தாவரவியல் அறிஞரும் மரபியல் துறையை உருவாக்கி வருமான க்ரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார்.   ஜூன் 1,1935  கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது எல் போர்டு மாட்டுவது பிரிட்டனில் இன்று கட்டாயமாக்கப்பட்டது.   ஜூன் 1,1968 மார்ஷல் நேசமணி மறைந்த நாள் ஜூன் 1,1968 இதே நாளில் தான்  ஹெலன் கெல்லர்  இவ்வுலகை விட்டு மறைந்தார்.  1880  ஜூன் 27   அன்று பிறந்த அவர்  18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.   பிறகு  பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார்.  இருந்தாலும் மனம் தளராமல்  பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன்.  ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர்.  பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை  அனுப்பி வைத்தது. அவர்த...

மே 31

  மே 31, 1825  நீரில் முக்குளித்து ஆழத்தில் ஆய்வு செய்வதற்கு உதவும் ஸ்கியூபா என்னும் முக்குளிப்பு உபகரணத்திற்கு பிரிட்டனை சார்ந்த வில்லியம் ஜேம்ஸ் காப்புரிமம் பெற்றார்.   மே 31, 1832  பரிதாபத்துக்குரிய கணித மேதை என்று நினைவு கொள்ளப்படும் கணித மேதை எவாரிஸ்ட்  கலாய்ஸ் பிரான்ஸ்  நாட்டின் பாரிசில் இன்று பிறந்தார்.  அவர் ஏன் பரிதாபத்துக்குரியவர் என்று கருதப்படுகிறார்?  அவரைப் பற்றிய சில விபரங்கள் இந்த லிங்க்-கில்   எவாரிஸ்ட் கலாய்ஸ் மே 31, 1898   மந்த வாயுக்களுள் ஒன்றான கிரிப்டான் ராம்சே என்பவராலும் ட்ராவல்ஸ் என்பவராலும் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. மே 31,1935 பாகிஸ்தானின் குவெட்டா நகரில், நிலநடுக்கம் ஏற்பட்டதில், 40,000 பேர் உயிரிழந்தனர். மே 31, 1973   சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் டில்லி அருகே தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது மோகன் குமாரமங்கலம் கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் உட்பட 48 பேர் இந்த விபத்தில் இறந்தனர். மே 31,1981 யாழ்ப்பாணத்தின் பல இடங்களில், நள்ளிரவில் வன்முறைகள் ஆரம்பமாயின. யாழ். பொது நூலகம், அ...

மே 30

மே 30,    1431:   பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மே 30,  1788 என் சிந்தனையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே என் தொழில் என்று கூறிய சிந்தனையாளர் வால்டேர் பாரிசில் காலமானார். மே 30,  1913:   லண்டன் உடன்பாடு1913 மூலம்,  முதலாம் பால்கன் போர் இன்று முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது. மே 30,  1929  முருகனையே முழு முதல் தெய்வமாக வழிபட்ட பாம்பன் சுவாமிகள் சமாதி நிலை எய்தினார். மே 30,  1931 நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான  சுந்தரராமசாமி இன்று பிறந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வந்தார்.  நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகத் திறமை கொண்ட அவர் 15.10.2005 ஆம் நாள் மறைந்தார். மே 30, 1934 விண்வெளியில் விண்கலத்துக்கு  வெளியே வந்து பயணித்த முதல் விண்வெளி விஞ்ஞானி அலக்சி லியனோவ் இன்று பிறந்தார். மே 30, 1973   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியி...

மே 29

  மே 29, 1829  சோடியம் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் முதலான தனிமங்களை கண்டுபிடித்தவர் நிலக்கரி சுரங்கத்துக்குள் பயன்படுத்த அபாயம் இல்லாத ஒரு விளக்கை வடிவமைத்து கொடுத்தவருமான பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் ஹம்பிரிடேவி இன்று காலமானார். மே 29,   1919 எர்னெஸ்ட் ரூதர்போர்ட் நைட்ரஜனின் மீது ரேடியம் கதிர்களை பாய்ச்சி அதை ஆக்சிஜனாக மாற்றினார்.  ஒரு வேதியியல் தனிமம் செயற்கை முறையில் இன்னொரு தனிமமாக மாற்றப்படுவது இதுவே முதல் முறை. மே 29, 1948:  ஐ.நா. அமைதிப் படை இன்று நிறுவப்பட்டது.  மே 29, 1953 டென்சிங் மற்றும் ஹில்லாரி இருவரும் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர். மே 29,   1972   இந்தி நடிகர்களான ராஜ் கபூர், ஷமி கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான பிருத்திவிராஜ் கபூர் மரணமடைந்தார். மே 29,   1985  சென்னை வரலாற்றின் சின்னமாக விளங்கிய மூர் மார்க்கெட் தீப்பிடித்து அழிந்தது. மே 29,   1987  முன்னாள் பிரதம மந்திரி சரண்சிங் காலமானார். மே 29, 1987 கோவா இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக உதயமானது.

மே 28

  மே 28, 1742  முதல் நீச்சல் குளம் லண்டனில் லெமன் தெருவில் திறந்து வைக்கப்பட்டது. மே 28, 1923 பிரபல திரைப்பட நடிகரும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான N.T.ராமராவ் இன்று பிறந்தார்.  மே 28, 1998 பாகிஸ்தான் இன்று  ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில நாடுகள் அந்நாட்டுக்கெதிராக  பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.   மே 28, 1999  ஜெகன் மோஹினி உள்ளிட்ட புகழ் பெற்ற திரைப்படங்களின் இயக்குநர்  பி. விட்டலாச்சாரியா மறைந்த தினம் இன்று.  மாயாஜாலக் காட்சிகள் என்றாலே விட்டலாச்சாரியா படம்  என்று சொல்லும் அளவு பெயர் பெற்றிருந்தார். 1920  ஜனவரி 20இல் கர்நாடகாவில்  பிறந்த அவர் 1999 மே 28 இல்  மறைந்தார்.  மே 28, 2008   240-ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து, நேபாளம்  குடியரசாக    இன்று     அறிவிக்கப்பட்டது.  ஆனால் இப்போது மக்கள் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்று போராடிக்கொண்டிருப்பது குடியாட்சி எப்படி நடக்கிறது என்பத...

மே 27

  மே 27, 1679 கேபியஸ் கார்ப்பஸ் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் விசாரணையின்றி யாரையும் சிறையில் வைக்கக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் பொருள். நீதிபதியின் முன் கொண்டு வந்த நிறுத்தவும் என்னும் பொருள்படும் இந்தச் சொற்றொடர் லத்தின் மொழித் தொடர். இந்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி. 1621 ஆம் ஆண்டு லண்டனில் அலிஸ் ராபின்சன் என்னும் ஒரு பெண்மணி ஒரு விருந்து வைத்தார்.  ரவுடித்தனத்திற்கு பெயர் போன சீமாட்டி அவர்.  விருந்தில் ஒரே கும்மாளமும் கூச்சலும் இருந்தது. இது மற்றவர்களுக்கு மிக இடையூறாக இருக்கவே அங்கே வந்த போலீஸ்காரர் ஒருவர் அமைதியாக விருந்தை நடத்தும் படி கேட்க அவள் அந்த போலீஸ்காரரை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டாள். எனவே அவர் அவளைக் கைது செய்ய,  உள்ளூர் நீதிபதி குற்றச் சீர்திருத்த விடுதிக்கு அனுப்பி விட்டார்.  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கர்ப்பிணியான தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் போதுமான உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும் கூறவே நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மிகக் கோபம் அடைந்தனர் அவள் விடுதலை செய்யப்பட்...

மே 26

  மே 26 ,1703 சாமுவேல் பெப்பிஸ் என்பவர் இங்கிலாந்து கடற்படையில் பணிபுரிந்தவர்.  1660 ஆம் ஆண்டு முதல் 1669 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் நடந்த சிறிய நிகழ்ச்சி, பெரிய நிகழ்ச்சி என அத்தனையையும் ஒன்று விடாமல் தனது டைரியில் எழுதி வந்தார். லண்டனில் பரவிய கொள்ளை நோய், 1662 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து, முந்தைய நாள் தான் பார்த்த நாடகம் முதலான அனைத்தையும் அவர் தன் டைரியில் எழுதி வந்தார்.  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை முறைகளை டைரியின் மூலம்  படம் பிடித்து காட்டிப் புகழ்பெற்ற இவர் இன்று காலமானார். மே 26 , 1897  மனோன்மணீயம் என்னும் கவிதை  நாடகம் தந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலமானார். மே 26, 1934  ”ஜெய் ஹிந்த்” எனும் முழக்கத்தை முதலில் முழங்கிய 'ஜெய் ஹிந்த்  செண்பகராமன்' என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த    செண்பகராமன்பிள்ளை மறைந்த நாள் இன்று.  1891ம் ஆண்டு செப்டம்பர் 15இல் பிறந்த செண்பகராமன்பிள்ளை 1934-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி வரையில் வாழ்ந்தார். மே 26, 1937 ஆச்சி மனோரமாவின் பிறந்தநா...

மே 25

  மே 25, 1903  கதிரியக்கத் தன்மையுடைய ரேடியம் என்னும் அரிய தனிமத்தை கண்டுபிடித்தது பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை பிரான்சில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மேரி க்யூரி இன்று சமர்ப்பித்தார். மே 25,   1915  தென் ஆப்பிரிக்காவில் இருந்து சத்தியாகிரகம் என்னும் போர் உத்தியை க்  கண்டுபிடித்து த்  திரும்பிய காந்தி அகமதாபாத் அருகில் ஒரு சிறு கிராமத்தில் வாடகைக்கு வீடு அமர்த்தி சத்தியாகிரக ஆசிரமத்தை நிறுவினார். இந்த ஆசிரமம் சபர்மதி சிறைச்சாலைக்கு அருகில் அமைந்திருந்தது. மே 25,   1983  சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நீர்) இந்திரா காந்தியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  மே 25,   2013 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் பத்மஸ்ரீ  T.M.சௌந்தரராஜன் மறைந்த நாள்.  நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் என்றாலே தவிர்க்க முடியாத பெயராக விளங்கிய இவர் தன்னுடைய குரலில் ஒரு மெலிதான  மாற்றத்தின் மூலம் எம். ஜி. ஆர் , சிவாஜி என்ற இரண்டு பெரிய ஆளுமைகளும் அவர்களே பாடுவது போல நினைக்கும் வண்ணம் பாடி சாதனை படைத்தவர்....

மே 24

  மே 24, 1801  பாஞ்சாலங்குறிச்சி படுகொலை நடந்த நாள் இன்று. பிப்ரவரி இரண்டாம் தேதி பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை ஏழே நாளில் கட்டி முடிக்க, ஆங்கிலேய படை ஒன்பதாம் தேதி முதல் மீண்டும் கோட்டையை முற்றுகையிட்டு தகர்க்க முயன்றது.   104 நாட்கள் இந்த முற்றுகை நீடித்தது.  இறுதியாக  கோட்டையைக்  கைப்பற்றவும் அங்கிருந்து மக்களை வெளியேற்றவும் ஆங்கிலேயப் படைகள் கோட்டையில் புகைக் குண்டுகளை வீச கோட்டை முழுவதும் புகை மண்டியது.  சில குண்டுகள் வெடித்துத் சிதறி தீப்பற்றியது.   இதனால் கோட்டையில் உள்ள நிலவறைக்குள் இருந்த ஏராளமான பெண்களும் குழந்தைகளும் மூச்சுத் திணறி இறந்தனர்.   புகையினால் கண்களில் எரிச்சல் ஏற்பட வெளியே ஓடி  வந்தவர்கள்  எரியும் நெருப்பில் விழுந்தனர்.  பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விடக் கொடூரமானது இந்த பாஞ்சாலங்குறிச்சிப் படுகொலை.  104 நாட்களாக நடந்த அந்தப் போர் இன்றுடன் முடிவடைந்தது. மே 24, 1973  முத்தமிழ்மணி மு.அருணாசலம் பிள்ளை இன்று காலம...

மே 23

  மே 23, 1785  இரு குவியக் கண்ணாடி Bifocal பெஞ்சமின் பிராங்கிளினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.  மே 23, 1974  கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் மனைவியும் நகைச்சுவை நடிகையுமான டி.ஏ.மதுரம் காலமானார். மே 23, 1981 உடுமலை நாராயண கவி மறைந்த நாள். மே 23, 1984   செல்வி பச்சேந்திரி பால் என்னும் 21 வயது இந்திய பெண் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இன்று அடைந்தார் எவரெஸ்ட் அடைந்த முதல் இந்திய பெண் இவர் தான்.

மே 22

  மே 22,1772 ராஜா ராம் மோகன் ராய் இன்று பிறந்தார்.  மே 22, 1906 இப்போது நடைமுறையில் இருக்கின்ற ஆகாய விமானங்களுக்கு முன்மாதிரியாக முதல் முறையாக ஒரு பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு இன்று அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. மே 22,1948  ஹைதராபாத் இந்திய யூனியனில் சேர்வதை எதிர்க்கும் ரசாக்கள் கங்காப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை பம்பாய் மெயிலைத் தாக்கி பலரைக் கொன்று குவித்தனர். இத்தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நாலு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போய்விட்டனர்.

மே 21

  மே 21, 1903  உழைக்கும்   பத்திரிக்கையாளர் என்று அந்த நாளிலேயே பெரும்புகழ் பெற்றிருந்த ஜி.பரமேஸ்வரன்பிள்ளை காலமானார். மே 21, 1991  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்லும்போது தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத் தீவிரவாதிகளால், திட்டமிடப்பட்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். மே 21, 1994  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதா சென் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது  அவருக்கு  வயது 18.

மே 20

  மே 20, 1506  புதிய உலகம் என்று கூறப்பட்ட அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் இன்று காலமானார். மே 20, 1851 ஆட்டோமொபைல் துறையில் முத்திரை பதித்த யமஹா நிறுவனத்தன் நிறுவனர் டொரகுசு யமஹா ஜப்பானில் இன்று பிறந்தார்.   யமாஹா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் மட்டுமல்லாது இசைக்கருவிகள் உற்பத்தியிலும் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாகும்.  மே 20, 1894 காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் பிறந்த நாள். இவர் வழங்கிய அருளுரைகளில் இடம் பெற்ற தத்துவங்களின் தொகுப்பாக வெளிவந்த  தெய்வத்தின் குரல் எனும் நூல் ஒரு புகழ் பெற்ற நூலாகும்.  மே 20, 1932 விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திர பால் இன்று மறைந்தார். மே 20, 1932 தமிழ் அறிஞர்களில் பலரது பெயர்கள் கூட நமக்கு தெரிவதில்லை தொல்காப்பியர் சொல், பொருள், எழுத்து அதிகாரங்களைப் பதிப்பித்த சி.வை.தாமோதரன் பிள்ளையை பற்றி ஒரு சிலருக்காவது தெரியும். ஆனால் அவருக்கும் சற்று முன்னதாகவே இந்தத் துறையில் காலடி வைத்தவர் பவானந்தம் பிள்ளை. அப்படி ஒருவர் இருந்தாரா என்று தோன்றும்.  தொல்காப்பியம் ...

மே 18

மே 18, 1920 -  எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் பிறந்த நாள்.  சில ஆண்டுகள் வரை ஒவ்வொரு பள்ளியின் நூலகங்களிலும் நாட்டுக்கு உழைத்த நல்லவர்  என்ற தலைப்பில் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருக்கும். அந்த வரிசையில் வந்த எல்லாத் தலைவர்களின் வரலாறையும் எழுதியவர் இவர் தான்.  இவர் எழுதிய "காதுகள்" என்ற நாவலுக்கு  சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவர் ஒரு கவிஞரும் கூட.    மே 18, 1955   இந்தியாவில் மதச்சடங்காக கருதப்படும் திருமணத்திற்கு சட்டபூர்வமாக பாதுகாப்பளிக்க இந்து திருமண சட்டம் இயற்றப்பட்டு இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மே 18,   1966  இந்தியாவின் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானி பஞ்சனன் மகேஸ்வரி இன்று காலமானார். மே 18,   1974  ராஜஸ்தானில் பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இதன் மூலம் இந்தியா அணு ஆயுதம் தயாரிக்கும் திறனுடைய ஆறாவது நாடாக மாறியது. மே 18,   1983   மணிக்கொடி எழுத்தாளர்  பி. எஸ். இராமையா மறைந்த தினம்.  எழுத்தாளரான இவர் பல திரைப்படங்களுக்கு கத...

மே 17

  மே 17, 1697 ஒரிசாவில் இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கும்  பூரி ஜெகன்னாதர் கோவில் இன்று இடிக்கப்பட்டது. இக் கோவிலில் 18 முறை கொள்ளையடித்து விலை மதிக்க முடியாத செல்வங்களைக் களவாடிக்கொண்ட பின் இன்று இடிக்கப்பட்டது. மே 17, 1861  முதன் முதலில் திட்டமிட்டு ஒரு சுற்றுலா பயணம் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது. லண்டனிலிருந்து பாரிசுக்கு தொழிலாளர்களை சுற்றுலாவாக அழைத்துச் செல்லும் இத்திட்டத்திற்கு தாமஸ் குக் ஏற்பாடு செய்தார். முதல் சுற்றுலாக் குழு இன்று வெள்ளிக்கிழமை லண்டனில் இருந்து புறப்பட்டது. மே 17, 1873   மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஞானியாரடிகள் பிறந்த நாள்.   திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் மடாதிபதியாக இருந்தவர். தமிழையும் சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகப் பாவித்தவர் இவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்க்ருதம் என பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர்.   வாழ்நாள் முழுவதும் சைவ நெறி நின்ற இவர் மறைவிலும் பெருமை பெற்றவர். தைப்பூச நாளில் பழனி முருகன் கோவில் தரிசனம் முடித்த பிறகு அமைதியாக...

மே 16

  மே 16, 1843  தந்தி அனுப்பும் முறைக்கு காப்புரிமம் பெற்ற வில்லியம் ஹூக் என்பவரிடமிருந்து ஹோம் என்பவர் ஆண்டு வாடகைக்கு உரிமம் வாங்கி வாணிப நோக்குடன் முதல் தந்தியை இன்று அனுப்பினார்.  பாட்டிங்டன் என்னும் இடத்திலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோ என்னும் ஊருக்கு இன்று முதல் தந்தி அனுப்பப்பட்டது. மே 16,   1921  கணையத்தின்  ஹார்மோன் சுரக்கும் தன்மையைப் பற்றிய ஆராய்ச்சியை சர் கிராண்ட் பாண்டிங்கும்  சி.ஹெச். பெஸ்ட்டும் ஆரம்பித்த நாள் இன்று.  இந்த ஆராய்ச்சியின் முடிவு தான் இன்சுலின் கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயினால் அவதிப்படுவோரின் தொல்லையைப் போக்குகின்ற மருந்து இன்சுலின் இப்படித்தான் பிறந்தது.  மே 16,   1929  சிறந்த திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு ஆஸ்கார் விருது முதன்முதலாக வழங்கப்பட ஆரம்பித்தது. அப்போது இந்த விருதுக்கு ஆஸ்கார் என்று பெயர் இல்லை.     1931 ஆம் ஆண்டு இந்த விருது வழங்கும் மோசன் பிக்சர்ஸ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலக காப்பாளர் மார்க்கெட் சிலையை பார்த்துவிட்டு என்  என் சித்தப்பா ஆஸ்கார் போலவே உள்ளது எ...

மே 15

  மே 15, 1721  எந்திரத் துப்பாக்கி லண்டனில் தயாரிக்க த்  துவங்கப்பட்டது. மே 15,  1930  கலிபோர்னியாவில் ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் விமானத்தில் முதன் முதலாக மிஸ் எல்லன் சர்ச் என்னும் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிய ஆரம்பித்தார். மே 15, 1945   இந்திய தேசிய ராணுவம் சரணடைந்தது. மே 15,  1990  பெருந் தமனிகள் இடம் மாறி அமைந்ததையும் வெண்ரிகில் தடுப்புச் சுவரில் அமைந்த கோளாறையும்  நிவர்த்தி செய்வதற்கு  பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தைக்கு டெல்லியில் AIIMS இல் இன்று இதய அறுவை சிகிச்சை நடந்தது.   இவ்வளவு சிறிய குழந்தைக்கு இந்தியாவில் நடந்த முதல் இதய அறுவை சிகிச்சை இது தான்.  மே 15, 1993   காஞ்சி மடத்தில் காஞ்சி பெரியவரின் சமாதியான பிருந்தாவனம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மே 15, 1993  இந்திய ராணுவத்தின் முதலாவது தளபதியாக இருந்து பீல்ட் மார்ஷல் கரியப்பா பெங்களூரில் ராணுவ மருத்துவமனையில்  இன்று தன் 94 வது வயதில் காலமானார்.

மே 14

  மே 14, 1692   வானிலை முன்னறிவிப்பு A collection for the improvement of husbandry and trade  (கலெக்க்ஷன் ஃபார் தி இம்ப்ரூவ்மென்ட் ஆப் ஹஸ்பண்ட்ரி அண். ட்ரேட்) எனும் வார இதழில் முதன் முதலில் வெளியாகத்  தொடங்கியது. மே 14, 1796  எனக்கு ஏற்கனவே மாட்டம்மை வந்ததால் பெரியம்மை வராது என்று ஒரு மாடு மேய்க்கும் பெண் சர்வசாதாரணமாகக் கூறியதைக் கேட்டு வியப்புற்ற எட்வர்ட் ஜென்னர், அதைப்பற்றி பல ஆண்டுகள் ஆய்வு செய்தார்.  இறுதியில் மாட்டம்மை கண்டிருந்த ஒரு இடைச்சியின் கைக் கொப்புளத்திலிருந்து சீரம் எடுத்து அம்மைப்பால் தயாரித்தது இன்று தான். இதை ஜேம்ஸ் பிப்ஸ் என்னும் சிறுவனின் உடலில் செலுத்தினார்.  ஆறு வாரங்கள் கழித்து வீரியம் இல்லாத பெரியம்மை சீரத்தையும் அந்தப் பையனின் உடலில் செலுத்திப் பார்த்தார்.  தொற்று  எதுவும் ஏற்படவில்லை.  பெரியம்மையை குணப்படுத்தும், (தடுக்கும்) வேக்சின் இப்படித்தான் பிறந்தது.  வாக்கா என்ற லத்தீன்  சொல்லுக்கு பசு என்று பொருள்.  இதிலிருந்து தோன்றியதுதான் வேக்சினேஷன் என்னும் சொல்.  Vaccine என்ற சொல் பசு மாட...

மே 13

  மே 13, 1646 ஷாஜகான் கட்டத் தொடங்கிய டெல்லி செங்கோட்டை இன்று கட்டி முடிக்கப்பட்டது.  மே 13, 1904  பாரதத்தின் தலைசிறந்த தொழில் அதிபரான ஜாம்ஜெட்ஜி  டாடா காலமானார். மே 13, 1920   மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே   என்ற பாடலை எத்தனையோ முறை கேட்டு அதில் லயித்திருப்போம்.  ‘குங்குமப்பூவே... கொஞ்சும்புறாவே...’ என்று சந்திரபாபுவின் குரலில் வரும்  பாடலை இப்போது கேட்டாலும் ஒரு குழந்தைத்தனமும் குதூகலமும் நமக்குள் வந்துபோவதை அனுபவித்திருப்போம்.  அந்தப் பாடல்களை எழுதியவரான பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று.  மே 13,1952 சுதந்திர இந்தியாவின்  பாராளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது.  மே 13,1956   வாழும் கலை என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பிறந்த நாள்.  மே 13, 1962 S.ராதாகிருஷ்ணன் இன்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார். மே 13, 1967 ஜாகிர் உசேன் இன்று இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரானார். மே 13, 2000   'கவிஞாயிறு'  என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கவிஞர்...

மே 12

  மே 12, 1884  ஹைட்ரோ கார்பனை பிரித்தெடுக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்த பிரெஞ்சு விஞ்ஞானி சார்லஸ் அடோல்ப்  வூட்ஸ் பாரிசில் காலமானார்.   மே 12, 1924 பிரபல நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா பிறந்த நாள். பத்மஸ்ரீ, கலைமாமணி உட்பட பல விருதுகளைப்  பெற்றவர் இவர்.  மே 12,   1962  டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். மே 12,   1984  செட்டிநாட்டு அரசர் என்று அழைக்கப்பட்ட ராஜா சர் முத்தையா செட்டியார் இன்று காலமானார். மே 12,   1994   முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியின் மனைவி ஜாக்யூலின் கென்னடி இன்று காலமானார்.

மே 11

  மே 11, 1686  வெற்றிடம் பற்றி ஆய்வு நடத்தி புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆட்டோ வான் கெரிக் இன்று காலமானார். மே 11, 1897 கவியோகி என்றழைக்கப்பட்ட சுத்தானந்த பாரதியார் பிறந்த நாள்.  இவரது படைப்பான  'பாரத சக்தி  மகா காவியம்' தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு படைப்பாகும்.  மே 11 , 1929  ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் சிதம்பரத்தில் துவக்கப்பட்ட மீனாட்சி கல்லூரி இன்று அண்ணாமலை பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மே 11, 1949  சயாம் இன்று தனது பெயரை தாய்லாந்து என மாற்றிக் கொண்டது. மே 11, 1962  தத்துவ மேதை எஸ்.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 11, 1988  சென்னையில் பிர்லா கோளரங்கம் இன்று ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமானால் திறந்து வைக்கப்பட்டது. மே 11, 1988   இலிநாய்ஸில் மான்ட் கோமரி என்னும் இடத்தில் பிரிட்ஜெட் எல்லீஸ் என்னும் ஒன்பது வயது சிறுமி தனியாக இன்று விமானம் ஓட்டி சாதனை புரிந்தார். மே 11,1998 ராஜஸ்தான் மாநில பாலைவனப் பகுதியில் உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் இன்று இந்தியா மூன்று அணுகுண்டுகளை சோதனை செய்து பார்த்தது. சோதனை வெற்ற...

மே 10

  மே 10,1526 முதலாம் பானிபட் போரில் வென்ற பாபர் இன்று ஆக்ராவுக்குள் நுழைந்தார். மே 10, 1857  சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷாரால் வர்ணிக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போர் மீரட்டில் துவங்கியது. இந்தப் போர் டெல்லிக்கு ப்  பரவி ய  மறுநாள் ( மே  11ஆம் தேதி) பகதூர்ஷா மன்னராக அறிவிக்கப்பட்டார். மே 10, 1901  லண்டனில் ராயல் சொசைட்டி ஹாலில் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்கள் முன்னிலையில் நம் நாட்டின் அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை பல ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். மே 10, 1932 - தமிழ் மொழியின் கட்டுக்கோப்பான இலக்கணங்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்களை வெளியிட்ட இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பிறந்த நாள்.    மே 10, 1933  நாஜி பிரச்சார அமைச்சர் கோயபல்சின்  தூண்டுதல் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெர்லினில் நள்ளிரவில் கூடி புத்தக எரிப்பு ப்  போராட்டம் நடத்தினர்.   ஜெர்மனியின் பண்பாட்டிற்குப் புறம்பான நூல்கள் என்று கூறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் மான் முதலான ஜெர்மனி எழ...

மே 9

  மே 9, 1866 காந்தியின் அரசியல் குரு என்று கருதப்படும் கோபால கிருஷ்ண கோகலே இன்று பிறந்தார். மே 9, 1874 குதிரையால் இழுக்கப்படும் டிராம் கார் முதன் முதலாக பம்பாயில் இயக்கப்பட்டது. மே 9, 1941 தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளை காலமானார். மே 9, 1967  ஜாகிர் உசேன் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். மே 9, 1975 எலக்ட்ரானிக் தட்டச்சு இயந்திரம் உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. மே 9, 1986 எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தவர்கள்   டென்சிங் மற்றும் ஹில்லாரி நோர்கே ஆகிய இருவர். அவர்களுள் ஒருவரான டென்சிங் மறைந்த நாள். திபெத்தில் பிறந்த இவர் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்ந்துவந்தார். 

மே 8

  மே 8,  1794   நவீன வேதியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்சு விஞ்ஞானி லாரன்ட் லவாய்சியா  பாரிசில் காலமானார்.  எரிதல் Burning  என்பது ஆக்சிஜன் உதவியுடன் தான் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்துக் கூறியவர் இவர்.  பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆனால் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் இவர் நிரூபித்தார். மே 8, 1901  கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த வறட்சி காரணமாக இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நிலைமையை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அரசு அமைத்த குழு ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டது.  இதில் பஞ்சம் காரணமாக 12 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மே 8, 1915  இ ந்திய விடுதலைப் போராட்ட வீரர் அமின் சந்த் இன்று தூக்கிலிடப்பட்டார்.  மே 8, 1916 உலகமெங்கிலும் இந்தியப் பண்பாட்டையும் ஆன்மிக ஞானத்தையும்  உலகமெல்லாம் பரப்பிய சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள்.  மே 8, 1980  பெரியம்மை நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மே 8, 1980  தமிழறிஞர் மயிலை.சீனி ...

மே 7

  மே 7, 1861 ரவீந்திரநாத் தாகூர் இன்று பிறந்தார்.   மே 7, 1883   தமிழவேள் என்று குறிப்பிடப்படும் த.வே.உமாமகேசுவரன்பிள்ளை  பிறந்த நாள். தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து, அதன் தலைவராக இருந்தவர் இவர்.   மே 7, 1907 மின்சாரத்தால் இயங்கும் முத ல் டிராம் வண்டி பம்பாயில் இன்று இயக்கப்பட்டது. மே 7, 1909  உடனுக்குடன் போட்டோ எடுக்க முடிகின்ற போலராய்டு முறையைக் கண்டுபிடித்த  Edwin Herbert Land இன்று அமெரிக்காவில் பிறந்தார். மே 7, 1929  லாகூர் சதி வழக்கில்  special tribunal   லில்  பகத்சிங்கும் தத்தும் எவ்வித வாக்குமூலமும் கொடுக்க மறுத்துவிட்டனர். மே 7,1982  ஆக்சிஜனைப் பயன்படுத்தாமல் 4 அமெரிக்கர்களும் அவர்களது வழிகாட்டி ஷர்பாக்களும் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்த முதல் அமெரிக்கர்கள் இவர்களே.

மே 6

  மே 6, 1840 பசை தடவிய தபால் தலைகள் முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது. மே 6, 1854   இந்தியாவில் முதல் அஞ்சல் தலை இன்று வெளியிடப்பட்டது. மே 6, 1856 மனித உளப் பகுப்பாய்வியல் என்ற துறையைக் கண்டுபிடித்த சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud)  இன்று பிறந்தார். மே 6, 1952  மரியா மாண்டிசோரி காலமானார். மே 6, 1991  லண்டனில் சென்ட் மார்ட்டின் தியேட்டரில் அகதா கிறிஸ்டியின்    The Mousetrap  நாடகத்தின் 16,000 ஆவது நாள் காட்சி நடந்தது. உலகில் வேறு எந்த காட்சியும் தொடர்ந்து இவ்வளவு நாள் நடந்ததில்லை. இந்த நாடகம் முதலில் அம்பாசிடர் தியேட்டரில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி துவங்கியது. அங்கு 8,862 காட்சிகள் நடைபெற்றன. பின்னர் 1974 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் இந்த தியேட்டரில் நடத்திக்காட்ட ஆரம்பிக்கப்பட்டது.

மே 5

  மே 5, 1760 முதன் முதலில் குழியுடன் கூடிய தூக்கு மேடை அமைக்கப்பட்டது. மே 5, 1821 சைட் ஹெலினா தீவில் செயின்ட் வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் காலமானார். உலகின் மிகச்சிறந்த தளபதிகளில் ஒருவரான இவர் வயது 53. மே 5, 1903 அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலை பல்கலைக் கழக நிறுவனர் அவிநாசிலிங்கம் செட்டியார் பிறந்த நாள். அப்போதைய மதராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் இவர்.  மே 5, 1916   பழம்பெரும் திரைப்பட நடிகர்  பி. யு. சின்னப்பா பிறந்த நாள். மே 5, 1916 இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் இன்று பிறந்தார். 5 மே 1922  நடிகை டி. ஆர். ராஜகுமாரி பிறந்த தினம்.   அன்றைய முன்னணிக் கதாநாயகர்களான எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா,  டி. ஆர். மகாலிங்கம் போன்றோரின் படங்களில் கதாநாயகியாக  நடித்துப் புகழ் பெற்றவர் இவர்.  நடனத்திலும் பாடல்கள் பாடுவதிலும் திறமை கொண்டிருந்தவர். தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து இவர் நடித்திருந்த  ஹரிதாஸ் படம் தான் இன்று வரை அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையைப் பெற்றுள்ள படம். அந்தப் ...

மே 4

  மே 4,1799 திப்பு சுல்தான் போரில் உயிர்நீத்த தினம்.  மைசூரின் புலியென அழைக்கப்பட்ட திப்புசுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் பிரிட்டிஷ் படையால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இன்று கொல்லப்பட்டார்.  ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை பிரிட்டிஷாரால் முழுமையாக கைப்பற்றப்பட்டு யூனியன் ஜாக் கொடி பறக்க விடப்பட்டது.  திப்புசுல்தானின் மைந்தர்களும் மற்ற உறவினர்களும் கைது செய்யப்பட்டு கைவிலங்கு கால்விலங்கு பூட்டப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தான்  பின்னர் வேலூர் புரட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன. மே 4,1854 இந்தியாவின் முதல் தபால் தலை இன்று வெளியிடப்பட்டது. மே 4,1927   அமெரிக்க திரைப்படத் துறையைச் சேர்ந்த 30 பேர் கூடி தரமான திரைப்படம் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் விருதுகள் கொடுக்கத் தீர்மானித்தனர். அதன்படி இந்த அகடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பை உருவாக்கினார். ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்குவது இந்த அமைப்புதான்.  மே 4, 1979 பிரிட்டனின் முதல் பெண் பிரதம மந்திரியாக திருமதி மார்க்கெட் த...