Skip to main content

12 ஆம் வகுப்பு புணர்ச்சி விதி

 

12  ஆம் வகுப்பு புணர்ச்சி விதி

பூம்பாவாய் = பூ+பாவாய்

1: பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும். : பூம்பாவாய் 

இனநிரை = இனம் + நிரை

1: மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்: -இனநிரை

எத்திசை= எ + திசை

1 : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – எத்திசை

தலைக்கோல் = தலை + கோல்

1 இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் - தலைக்கோல்

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

1 : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -  வானமெல்லாம்

உரனுடை = உரன் + உடை

1 : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே: -உரனுடை

செம்பரிதி = செம்மை + பரிதி

1. ஈறு போதல்: செம் + பரிதி – செம்பரிதி.

நன்மொழி = நன்மை + மொழி

ஈறு போதல்- நன்மொழி

செந்தமிழே = செம்மை + தமிழே

1: ஈறு போதல் : செம் + தமிழே 

2 : முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே

வெங்கதிர் = வெம்மை + கதிர்

1 : ஈறு போதல் : வெம் + கதிர் 

2 : முன்னின்ற மெய் திரிதல் : -வெங்கதிர்

புதுப்பெயல் = புதுமை + பெயல்

1 :ஈறுபோதல் -        புது + பெயல்

2: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் -புதுப்பெயல்

அருங்கானம்= அருமை+கானம்;

1:ஈறு  போதல்         –அரு+கானம்;         

2:இனமிகல்  – அருங்கானம்

உன்னையல்லால் = உன்னை + அல்லால்

1: இஈஐ வழி யவ்வும் : உன்னை + ய் + அல்லால்

2: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்

ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் 

1 : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - ஆங்க் + அவற்றுள்

2 : உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே  - ஆங்கவற்றுள்

தனியாழி = தனி + ஆழி 

1 : இ ஈ ஐ வழி யவ்வும்: தனி + ய் + ஆழி

 2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே :  தனியாழி

ஏழையென = ஏழை+ என

1 : இ ஈ ஐ வழி யவ்வும்; ஏழை+ ய்+ என

 2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே : ஏழையென

 செல்லிடத்து - செல் + இடத்து

1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்:  செல்(ல்+இ)டத்து

2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே :  செல்லிடத்து

உள்ளொன்று = உள் + ஒன்று

1 : 'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' :  உள்(ள் + ஒ)ன்று

2 : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே':  உள்ளொன்று

முன்னுடை = முன் + உடை

1 : 'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' :  முன்ன்  + உடை

2 : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே':  முன்னுடை 

ஒருமையுடன் = ஒருமை + உடன்

1:'இஈஐவழி யவ்வும்': - ஒருமை + ய் + உடன்

 2: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே : ஒருமையுடன்

பெருங்கடல் = பெருமை+கடல்

1. ஈறுபோதல் - பெரு + கடல்

2  இனமிகல் - பெருங்கடல்

பெருந்தேர்= பெருமை + தேர்

1  ஈறுபோதல் - பெரு +தேர்

2  இனமிகல் - பெருந்தேர்


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...