12-புணர்ச்சி விதி
பூம்பாவாய் = பூ+பாவாய்
1: பூப்பெயர் முன் இன
மென்மையும் தோன்றும்.
இனநிரை = இனம் + நிரை
1: மவ்வீறு ஒற்றழிந்து
உயிரீறு ஒப்பவும்
-இனநிரை
எத்திசை= எ + திசை
1 : இயல்பினும்
விதியினும் நின்ற
உயிர்முன் கசதப மிகும்
–
-எத்திசை
வானமெல்லாம் = வானம் + எல்லாம்
1 : உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
வான(ம்+எ)ல்லாம் =
வானமெல்லாம்
·
செம்பரிதி = செம்மை + பரிதி
1. ஈறு போதல்
செம் + பரிதி –
செம்பரிதி.
செந்தமிழே = செம்மை + தமிழே
1: ஈறு போதல்
செம் + தமிழே
2 : முன்னின்ற மெய்
திரிதல் – செந்தமிழே
வெங்கதிர் = வெம்மை + கதிர்
1 : ஈறு போதல்
வெம் + கதிர்
2 : முன்னின்ற மெய்
திரிதல்
-வெங்கதிர்
புதுப்பெயல் = புதுமை + பெயல்
1 :ஈறுபோதல்
- புது + பெயல்
2: இயல்பினும்
விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
-புதுப்பெயல்
அருங்கானம்= அருமை+கானம்;
1:ஈறு போதல்
–அரு+கானம்;
2:இனமிகல் – அருங்கானம்
உன்னையல்லால் = உன்னை + அல்லால்
1: இஈஐ வழி யவ்வும்
உன்னை + ய் + அல்லால்
2: உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்
ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
1 : உயிர்வரின்
உக்குறள் மெய் விட்டோடும் -
ஆங்க் + அவற்றுள்
2 : உடல்மேல்உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே
- ஆங்கவற்றுள்
தனியாழி = தனி +
ஆழி
1 : இ ஈ ஐ வழி யவ்வும்
தனி + ய் + ஆழி
2 : உடல் மேல்
உயிர்வந்து ஒன்று வது இயல்பே
- தனியாழி
செல்லிடத்து - செல் + இடத்து
11 : தனிக்குறில் முன்
ஒற்று உயிர்வரின் இரட்டும்
- செல்(ல்+இ)டத்து
2 : உடல் மேல்
உயிர்வந்து ஒன்று வது இயல்பே
- செல்லிடத்து
உள்ளொன்று = உள் + ஒன்று
1 : 'தனிக்குறில் முன்
ஒற்று உயிர்வரின் இரட்டும்'
- உள்(ள் + ஒ)ன்று
2 : 'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'
- உள்ளொன்று
ஒருமையுடன் = ஒருமை + உடன்
1:'இஈஐவழி யவ்வும்'
- ஒருமை + ய் + உடன்
2: 'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது
இயல்பே
- ஒருமையுடன்
Comments
Post a Comment
Your feedback