Skip to main content

இவ்வளவு தானா எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்?

 

பிழையில்லாமல் ஒரு வாக்கியம் எழுத, எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும் .

எழுவாய் என்றால்,

 

ஒரு வாக்கியத்தில் யாரைப் பற்றி அல்லது எதனைப் பற்றிய செய்தி சொல்லப்படுகிறதோ அதைக் குறிக்கும் பெயர்பெயர்ச்சொல்) தான் எழுவாய்.

 

அதாவது, யார்?, எது? என்ற கேள்விக்கு விடையாக் கிடைப்பது எழுவாய்.

 

கண்ணதாசன் கவிஞர்.

இதில் கண்ணதாசன் எழுவாய்.

எப்படி?

இது கண்ணதாசனைப் பற்றிய செய்தி. அதனால் கண்ணதாசன் என்பது எழுவாய்.

 

அவன் பொய் சொல்லமாட்டான்.

இதில் அவன் என்பது எழுவாய்.

எப்படி?

இது அவனைப் பற்றிச் சொல்கிறது என்பதால்.

சில நேரங்களில் எழுவாய் வெளியே தெரியாமல் இருக்கும். அதைத் தோன்றா எழுவாய் என்று சொல்லுவார்கள்.

 

பொய் சொல்லக்கூடாது.

இது " நாம் பொய் சொல்லக்கூடாது" , " நீ பொய் சொல்லக்கூடாது" என்பதைப் போல புரிந்துகொள்ளப்படுகிறது.

"யார் பொய் சொல்லக்கூடாது ?"  என்று கேட்க வேண்டிய அவசியமில்லையல்லவா, அதனால் தான் இது தோன்றா எழுவாய்.

 

பயனிலை என்றால்...

 

எழுவாயைப் பற்றிச் சொல்லப்படும் செய்தியை அல்லது ஒரு தொடரை பயனிலை என்று சொல்லுவார்கள்.

 

இது கணக்குப்  புத்தகம்.

இது என்பது எழுவாய்.

கணக்குப் புத்தகம் என்பது பயனிலை.

எப்படி?

எழுவாய் இன்னதென்று சொல்வதால் இது பயனிலை.

 

கண்ணன் எழுதுகிறான்.

இதில் கண்ணன் என்பது எழுவாய்.

எழுதுகிறான் என்பது பயனிலை.

எப்படி?

எழுவாயின் செயலைக் குறிப்பதால் இது பயனிலை.

 

மாம்பழம் இனிக்கும்.

மாம்பழம் என்பது எழுவாய்.

இனிக்கும் என்பது பயனிலை.

எழுவாயின் இயல்பாய்க் குறிப்பதால் இனிக்கும் என்பது பயனிலை.

 

பாரதம் வாழ்க!

பாரதம் என்பது எழுவாய்.

வாழ்க என்பது பயனிலை.

எப்படி?

எழுவாயை வாழ்த்துவதால் இது பயனிலை.

(தலைவர் ஒழிக என்பதில் ஒழிக என்பது பயனிலை)

 

தம்பி வந்தானா ?

இதில் தம்பி என்பது எழுவாய்.

வந்தானா என்பது பயனிலை.

எழுவாயைப் பற்றி வினவியதால் இது பயனிலை.

 

ஆக, பயனிலை என்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்

து,

எழுவாய் இன்னதென்று கூறலாம்.

எழுவாயின் செயலைக் குறிக்கலாம்.

எழுவாயின் இயல்பு என்னவென்று சொல்லலாம்.

எழுவாயை வாழ்த்தவோ , பழிக்கவோ செய்யலாம்.

எழுவாயைப் பற்றி வினவலாம்.

 

செயப்படுபொருள் என்றால்...

எது அல்லது யார் செய்கிறார்களோ அது எழுவாய் என்று தெரியும்.

பயனிலை என்றாலும் தெரியும்.

செயப்படுபொருள் என்பது என்ன?

எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.

 

கபிலன் முட்டையை உடைத்துவிட்டான்.

எதை உடைத்துவிட்டான்?

முட்டையை .

எதை? என்பற்கு விடையாக வரும் முட்டை செயப்படுபொருள்.

 

 

கபிலன் முட்டை தின்றான்.

எதைத் தின்றான்?

முட்டையை .

எனவே முட்டை என்பது செயப்படுபொருள்.

 

கபிலன் தின்றான்.

எதைத் தின்றான்.?

எதை என்று தெரியவில்லை. ஆனால் எதையோ தின்றான்.

எனவே செயப்படுபொருள் மறைந்திருக்கிறது.

 

கபிலன் தூங்குகிறான் ?

எதைத் தூங்குகிறான் ?

இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று கேட்கத்  தோன்றுகிறதா?

ஆமாம் இது அர்த்தமற்ற கேள்வி தான்.

அதனால் தான் இதில் செயப்படுபொருள் இல்லை.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...