சொல்லும் பொருளும்
2.3. நெடுநல்வாடை
· புதுப்பெயல் – புதுமழை
· ஆர்கலி – வெள்ளம்;
· கொடுங்கோல் – வளைந்த கோல்
· புலம்பு – தனிமை
· கண்ணி – தலையில் சூடும் மாலை
· கவுள் – கன்னம்
· மா – விலங்கு
3.3. கம்பராமாயணம்
· அமலன் – இராமன்
· இளவல் – தம்பி
· நளிர்கடல் – குளிர்ந்தகடல்
· துன்பு – துன்பம்
· உன்னேல் – எண்ணாதே
· அனகன் – இராமன்
· உவா – அமாவாசை
· உடுபதி – சந்திரன்
· செற்றார் – பகைவர்
· கிளை – உறவினர்
4.4. புறநானூறு
- வாயிலோயே – வாயில் காப்போனே
- வள்ளியோர் – வள்ளல்கள்
- வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
- வித்தி – விதைத்து
- உள்ளியது – நினைத்தது
- உரன் – வலிமை
- வறுந்தலை – வெறுமையான இடம்
- காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
- கலன் – யாழ்
- கலப்பை – கருவிகளை வைக்கும் பை
- மழு – கோடரி
5.3. தேவாரம்
·
மலிவிழா – விழாக்கள் நிறைந்த
·
மடநல்லார் – இளமை பாெருந்திய பெண்கள்
·
கலிவிழா – எழுச்சி தரும் விழா
·
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
·
ஒலிவிழா – ஆரவார விழா
5.4. அகநானூறு
·
வேட்டம் – மீன் பிடித்தல்
·
கழி – உப்பங்கழி
·
செறு – வயல்
·
கொள்ளை – விலை
·
என்றூழ் – சூரியனின் வெப்பம்
·
விடர – மலைவெடிப்பு
·
கதழ் – விரைவு
·
உமணர் – உப்பு வணிகர்
·
எல்வளை– ஒளிரும் வளையல்
·
தெளிர்ப்ப – ஒலிப்ப
·
விளிஅறி – குரல்கேட்ட
·
ஞமலி – நாய்
·
வெரீஇய– அஞ்சிய
·
மதர்கயல்– அழகிய மீன்
·
புனவன் – கானவன்
·
அள்ளல் – சேறு
· பகடு– எருது
6.3. சிலப்பதிகாரம்
·
புரிகுழல் – சுருண்ட கூந்தல்
·
கழை – மூங்கில்
·
கண் – கணு
·
விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
·
உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
·
பூதர் – ஐம்பூதங்கள்
·
ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
·
நித்திலம் – முத்து
·
விருந்து – புதுமை
·
மண்ணிய – கழுவிய
·
நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
·
தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
·
ஓடை – முக படாம்
·
அரசு உவா – பட்டத்து யானை
·
பரசினர் – வாழ்த்தினர்
·
பல்இயம் – இன்னிசைக் கருவி
·
குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
·
தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
·
வாரம் – தெய்வப்பாடல்
·
ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
·
இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
·
கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
6.4. மெய்ப்பாட்டியல்
·
நகை – சிரிப்பு
·
இளிவரல் – சிறுமை
·
மருட்கை – வியப்பு
·
பெருமிதம் – பெருமை
·
வெகுளி – சினம்
·
உவகை – மகிழச்சி
7.4. புறநானூறு
·
காய்நெல் – விளைந்த நெல்.
·
மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
·
செறு – வயல்
·
தமித்து – தனித்து
·
புக்கு – புகுந்து.
·
யாத்து – சேர்த்து
·
நந்தும் – தழைக்கும்
·
வரிசை – முறைமை
·
கல் – ஒலிக்குறிப்பு
·
பரிவு – அன்பு
·
தப – கெட
·
பிண்டம் – வரி
· நச்சின் – விரும்பினால்
8.3. இரட்சணிய யாத்திரிகம்
·
உன்னலிர் – எண்ணாதீர்கள்
·
பிணித்தமை – கட்டியமை
·
நீச – இழிந்த
·
நேசம் – அன்பு
·
வல்லியதை – உறுதியை
·
ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
·
பாதகர் – கொடியவர்
·
குழுமி – ஒன்றுகூடி
·
பழிப்புரை – இகழ்ச்சியுரை
·
ஏதமில் – குற்றமில்லாத
·
ஊன்ற – அழுந்த
·
மாற்றம் – சொல்
·
நுவன்றிலர் – கூறவில்லை
·
ஆக்கினை – தண்டனை
·
நிண்ணயம் – உறுதி
·
கூவல் – கிணறு
·
ஒண்ணுமோ – முடியுமோ
·
உததி – கடல்
·
ஒடுக்க – அடக்க.
·
களைந்து – கழற்றி
·
திகழ – விளங்க
·
சேர்த்தினர் – உடுத்தினர்
·
சிரத்து – தலையில்;
·
பெய்தனர் – வைத்து அழுத்தினர்.
·
கைதுறும் – கையில் கொடுத்திருந்த;
·
கண்டகர் – கொடியவர்கள்;
·
வெய்துற – வலிமை மிக
·
வைதனர் – திட்டினர்
·
மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
·
மேதினி – உலகம்
·
கீண்டு – பிளந்து
·
வாரிதி – கடல்
·
சுவறாதது – வற்றாதது
·
வல்லானை – வலிமை வாய்ந்தவரை
·
நிந்தை – பழி
·
பொல்லாங்கு – கெடுதல், தீமை.
8.4. சிறுபாணாற்றுப்படை
·
வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
·
கவாஅன் – மலைப்பக்கம்
·
கலிங்கம் – ஆடை
·
சுரும்பு – வண்டு
·
நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
·
பிறங்கு – விளங்கும்;
·
பறம்பு – பறம்பு மலை
·
கறங்கு – ஒலிக்கும்
·
வாலுளை – வெண்மையான தலையாட்டம்
·
மருள – வியக்க
·
நிழல் – ஒளி வீசும்
·
நீலம் – நீலமணி
·
ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
·
அமர்ந்தனன் – விரும்பினன்
·
சாவம் – வில்;
·
மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்);
·
கரவாது – மறைக்காது
·
துஞ்சு – தங்கு;
·
நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை);
·
போது – மலர்
·
கஞலிய – நெருங்கிய;
·
நாகு – இளமை
·
குறும்பொறை – சிறு குன்று;
·
கோடியர் – கூத்தர்
·
மலைதல் – போரிடல்
·
உறழ் – செறிவு
·
நுகம் – பாரம்.
Comments
Post a Comment
Your feedback