Skip to main content

Keats ன் வறுமை பற்றி Robert Browning .

 

சேர்ந்தே இருப்பது ?

வறுமையும் புலமையும் 

என்று ஒரு திரைப்பட வசனம் சொல்லும். 


அந்தக் காலம் தொடங்கி பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் கொடிய வறுமையில் வாடியிருக்கிறார்கள்.


சங்கப் பாடல் தொடங்கி இப்போது வரை புலமையும் வறுமையும் எப்படியோ பொருந்திப் போய்விட்டது.


இது ஒரு தனிப் பாடல். புலவரின் வறுமையை இப்படிச் சொல்கிறது. 


தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, 

என்னைப் படைத்தபோதே எனக்கு கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.


இல்லாவிட்டால், 


கையில் கொஞ்சம் தங்கத்தையாவது கொடுத்து என்னைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.


ஆனால் அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் அவதிப்படுகிறேன். 

கொஞ்சம் காசுக்காக இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!


பாடல் இது தான். 


கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான் 

          குடிக்கத்தான் கற்பித்தானா!

இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்

          கொடுத்துத்தான் இரட்சித்தானா!

அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்

           நோவத்தான் ஐயோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

            புவியில்தான் பண்ணி னானே! 

 -இராமச்சந்திர கவிராயர்


தமிழ்ப் புலவர்கள் மட்டும் தான் இப்படி வறுமையில் வாடினார்களா?


Keats ன் வறுமை பற்றி Robert Browning கவிதை சொல்லும்.


Hobbs hints blue,—Straight he turtle eats:

Nobbs prints blue,—claret crowns his cup:

Nokes outdares Stokes in azure feats,—

Both gorge. Who fished the murex up?

What porridge had John Keats?


-Robert Browning 


மேலோட்டமாகப் பார்த்தால் கீட்ஸின் கஞ்சிக்கும் நாப்ஸ்,ஹாப்ஸ் போன்றவர்களின் வெரைட்டி வெரைட்டியான உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்?


Hobbs, Nokes, Stokes இவர்களெல்லாம் பதிப்பாளர்கள்.

Keats போன்றவர்களின் கவிதைகளை வண்ணமயமாக அச்சிட்டு வெளியிட்டு பணக்காரராக விளங்குபவர்கள். 

ஆனால் அவர்கள் வெளியிடும் கவிதைகளை எழுதிய கீட்ஸ் என்ற கவிஞன் பாவம் இன்னும் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கிறான்.

இது தான் கவிதை சொல்லும் செய்தி. 

Keats இன் பெருமைக்கு எந்த சேதாரமும் வராமல் வறுமைமையைச் சொல்லவேண்டும் என்பதால் கவிதையை ஒரு புதிர் போல மாற்றிக்கொண்டது Browning இன் புலமை. 

கவிதை மரபு போல கவிஞனின் ஏழ்மைக்கும் ஒரு தனி மரபு இருக்கும் போல!



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...