Skip to main content

The growth of the soil- பாரதியாரைப் பிரமிக்க வைத்த நாவல்


இயற்கை என்ற பின்னணியில் எழுந்த இந்த இலக்கியம் தன்னைப் பிரமிக்க வைத்ததாக ஒரு நாவலைப் பாராட்டி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியுள்ளார்.

அந்த நாவல் நார்வே நாட்டைச் சேர்ந்த Knut Hamsun (நட் ஹெம்சன்) என்பவரால் எழுதப்பட்டது. நாவலின் பெயர் The growth of the soil.

கடவுள்களால் சூழப்பட்ட இவ்வுலகில் மனிதன் தான் கதாநாயகன். அவனது உழைப்பில் உருவான உன்னதம் தானே இவ்வுலகம். இந்த நிஜத்தைச் சொல்கிறது இந்த நாவல்.

1920 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த நாவலுக்கு வழங்கப்பட்டது.

நாவலின் ஆரம்பத்தில் யாருமே இல்லாத வெட்ட வெளியும் காடும் நதியும் மட்டுமே காணப்படுகின்ற நிலத்தில் நடந்து செல்கிறான் ஒரு மனிதன். அவன் பெயர் ஐசக். அந்த நிலம் அவனை அழைக்கிறது. அந்த பரந்த பூமியை பராமரிக்க மனிதன் எவனும் இல்லை. தனக்குள் பேசிக் கொள்கிறான் ஐசக். கையில் ஒரு சாக்கு மூட்டை வைத்திருக்கிறான். அதில் கொஞ்சம் உணவுப் பொருள்களும் அவசியமான சில ஆயுதங்களும் இருக்கின்றன.அவன் சரியான நிலத்தைத் தேடிக் கொண்டே போகிறான். அது மனிதன் கைபடாத இடம் என்பதைப் புரிந்து கொள்கிறான் . அவன் பலசாலி. உழைப்பை நேசிப்பவன். அந்த இடத்தை சீராக்க உழைக்கிறான். 


தூரத்தே போய் சில பொருட்களை விற்றுவிட்டு மூன்று ஆடுகளையும் ஒரு மண்வெட்டையும் கொண்டு வந்து நிலத்தைப் பண்படுத்த ஆரம்பிக்கிறான். ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவனிடம் தனக்கு உதவக்கூடிய பெண் யாராவது தெரியுமா என கேட்கிறான் ஐசக். அவனும் "பார்த்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான்.

இப்படி ஆரம்பமாகும் நாவல் வளர வளர அந்த நிலமும் ஒரு பண்ணையாக மாறுகிறது. அந்த நிலத்தைச் சுற்றி ஒரு சமூகம் உருவாகிறது. எப்படி உருவாகிறது என்பதைத் தான் அந்தக் கதை சொல்கிறது. வர்ணனை எதுவும் இல்லாமல் எளிமையான நடையில் அமைந்துள்ளது இந்த நாவல்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...