Skip to main content

Wig என்ன பெரிய wig

 

இப்போதெல்லாம் யாரும் வயதாவதை ஏற்றுக்கொள்வதில்லை. நரைத்த முடியை மைபூசிக் கொண்டு  இள'மை'யோடு  பூரித்துப் போகிறோம். 

இன்னும் சில முதியவர்கள் மை பூசியும் இளமைத்தோற்றம் வராததால் விக்(wig) வைத்துக் கொள்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த  விக் வைத்துக் கொள்ளும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்தது. 

முதியோர்கள் மட்டுமல்லாது,  சிறு வயதினர் கூட wig வைத்துக் கொள்வதை நாகரீகமாகக் கருதினர். செல்வந்தர்கள் விதவிதமாக wig வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றிக்கொண்டனர். 

நீளமாக wig வைத்துக் கொள்வது கௌரவமாகக் கருதப்பட்டது.  சமூகத்தில் முக்கியமானவர்கள் நீளமான full length wig வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். 

அப்படி பெரிய விக் வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை  கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்து, இதற்கென ஒரு சட்டம் போட்டார்கள்.

அந்தச் சட்டப்படி நீதிபதிகளும் பிஷப்களும் மட்டுமே பெரிய விக் வைத்துக் கொள்ள முடியும்.

மற்றவர்கள் நீளமாக விக் வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது. 

எனவே Bigwig  persons சமூகத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர். பழைய ஐரோப்பிய ஓவியங்களில் கூட இந்த விக் தலைகளைப் பார்க்கலாம்.

                                                    

இந்த Bigwig இன்றும் ஆங்கிலத்தில் அப்படியே வழக்கில் உள்ளது.

Bigwig என்றால் someone who holds an important position என்பது பொருள்.

அதாவது Bigwig என்றால் பெரிய மனுஷன் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

We have invited a few local bigwigs for the inauguration.

Many bigwigs came to his marriage function. 

என்பதெல்லாம் சில examples.


நம் நாட்டில் தலைக்கு கருப்பு மை அடிப்பதையும் wig வைப்பதையும் சட்டம் போட்டுத் தடைவிதித்தால்  பெரும்பாலான நம் அரசியல் தலைவர்களை யாருக்கும்  அடையாளம் தெரியாமல் போய்விடுமில்லையா?



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...