Skip to main content

கொஞ்சம் மட்டும் தான் கனவு

 கடற்கரை மணல் வெளியில் தன் காதலி நினைவில் காத்திருக்கிறான்.


அவனின் கனவில் மட்டுமே வந்து போகிற பெண் அவள்.


கடற்கரையில் தெரிவதெல்லாம் அலையும் நுரையும் ஆர்ப்பரிக்கும் கடலும்தானே.


காண்பதெல்லாம் அவளாகவே தெரிகிறாள் அவனுக்கு.


அந்த மாலையிலும் கனவு வருகிறது. பகல் கனவு தான்.


பின்புறமாக வந்து அவன் கண்களைப் பொத்திக் கொண்டு கேட்கிறாள் அவனிடம்.


அப்படி என்னதான் இருக்கிறது அந்தக் கடலில்?

இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.


அப்படி என்னதான் இருக்கிறது அந்த வானத்தில்? 

இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.


அப்படி என்னதான் இருக்கிறது நுரையிலும் அந்த சின்னக் குமிழிகளிலும்?

என்னிடம் சொல்லக் கூடாதா?


அவள் இப்படிக் கேட்க,

 அவன் எப்படிச் சொல்லியிருப்பான்?

கனவும் நனவும் கைகோர்க்க பாரதி கண்ட காதல் இது.


அவள் கேட்கிறாள்:

நெரித்த திரைகடலில் என்ன கண்டிட்டாய்?                                                                     

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? 

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?                                                                         

பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன? பேசுதி" என்றாள்.

அவன் சொன்ன பதில் :

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;                                                                         

 நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;                                                                              

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;                                                                        

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;                                                                         

பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;                                                                          

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.

(பாரதியார்)



நான் பார்த்த கடலில் உன் முகம் தான் தெரிந்தது.


நாம் பார்த்த வானில் , அலையில் நுரையில் , கடலில் உன் முகம் தான் கண்டேன்.


அது மட்டும் அல்ல; அங்கு கேட்டதெல்லாம் உன் சிரிப்பொலி தான். அந்தச் சிரிப்பொலி கேட்டுத் தான் என் கண்களைப் பொத்தியிருக்கும் உன் கைகளை விலக்கிப் பார்த்தேன். நீ நின்று கொண்டிருக்கக் கண்டேன்.


எது நிஜம் எது கனவு என்று தெரியாத இந்தக் காதல் பாரதி காட்டும் காதல்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...